சிலைகளைத் திருடிய பின்னர் தூக்கம் போச்சு, கெட்ட கனவு

சிலைகளைத் திருடிய பின்னர் தூக்கம் போச்சு, கெட்ட கனவு

1 mins read
f5b5b2e3-6257-4478-b57b-b04915d2428d
-

புது­டெல்லி: சாமி சிலை­க­ளைத் திரு­டிச் சென்­ற­வர்­கள் கெட்ட கனவு கண்­ட­தால் சிலை­களை திருப்பி ஒப்படைத்த சம்­ப­வம் உத்­த­ரப் பிர­தேசத்­தில் நிகழ்ந்­துள்­ளது.

தரூன்கா என்­னும் இடத்­தில் 300 ஆண்டு பழமை வாய்ந்த பாலாஜி கோவில் உள்­ளது. மே 9ஆம் தேதி இந்­தக் கோவி­லுக்­குள் நுழைந்த திரு­டர்­கள் பல கோடி ரூபாய் மதிப்­புள்ள 16 சாமி சிலை­

க­ளைக் கள­வா­டிச் சென்­ற­னர்.

ஆனால், ேநற்று முன்­தி­னம் 16ல் 14 சிலை­கள் மீண்­டும் கோவில் அர்ச்­ச­க­ரின் வீட்­ட­ருகே ஒரு சாக்கு மூட்­டை­யில் கட்­டப்­பட்டு இருந்­த­தாக பிடிஐ செய்தி கூறி­யது. அதில் கடி­தம் ஒன்­றும் இருந்­தது.

சிைலக­ளைத் திரு­டிய பின்­னர் ஒவ்­வொரு நாளும் தங்­க­ளுக்­குக் கெட்ட கனவு வரு­வ­தா­க­வும் நிம்­ம­தி­யா­கத் தூங்கமுடி­ய­வில்லை என்றும் பயத்தில் சிலைகளை ஒப்படைப்பதாக வும் அதில் திரு­டர்­கள் எழுதியிருந்­ த­தாக காவல்­துறை அதி­காரி ராஜீவ் குமார் சிங் கூறி­னார்.