'டிஜிட்டல் ரேப்': முதியவர் கைது

'டிஜிட்டல் ரேப்': முதியவர் கைது

1 mins read
3a08e41e-5ef2-4743-bfa0-edb1d2ca94a4
-

நொய்டா: உத்­த­ரப் பிர­தேச மாநி­லத்­தில் 81 வயது ஓவி­யர் ஒரு­வர் கைது செய்­யப்­பட்டு அவர் மீது 'டிஜிட்­டல் ரேப்' குற்­றச்­சாட்டு பதிவு செய்­யப்­பட்டுள்­ளது. மெள­ரிஸ் ரைடர் என்­னும் அந்த முதி­ய­வர் கோட்­வாலி என்­னும் பகு­தி­யில் தமது பரா­ம­ரிப்­பில் இருந்த 17 வய­துச் சிறு­மிக்கு ஏழு ஆண்­டு­க­ளுக்­கும் மேலாக பாலி­யல் தொல்லை தந்தது அம்­ப­ல­மாகி உள்­ளது. அச்­சம் கார­ண­மாக தயங்­கிய சிறுமி, பாலி­யல் துன்­பு­றுத்­தல்­களை ஆதா­ரங்­க­ளு­டன் பதிவு ெசய்து துணிச்­ச­லு­டன் காவல்­து­றை­யி­டம் ஒப்­ப­டைத்­தார்.

'டிஜிட்­டல் ரேப்' என்­பது மின்­னி­லக்­கத்­து­டன் தொடர்­பில்­லாத குற்­றம். கை, கால் பெரு­வி­ரல்­

க­ளால் மற்­ற­வர்­க­ளின் அந்த உறுப்­பி­னுள் வலுக்­கட்­டா­ய­மாக நுழைப்­பதே 'டிஜிட்­டல் ரேப்'. இவ்­வாறு செய்­வது மான­பங்­கக் குற்­றம் என்­றி­ருந்த நிலை­யில், 2012 நிர்­பயா பாலி­யல் கொடூர மர­ணத்­துக்­குப் பின்­னர் பாலி­யல் வன்­பு­ணர்வு (ரேப்) என்று இது வகைப்­ப­டுத்­தப்­பட்டு தண்­டனை அதி­க­ரிக்­கப்­பட்­டது.

இந்­தக் குற்­றத்­துக்கு ஐந்து ஆண்டு முதல் ஆயுள் வரை சிறைத் தண்­டனை விதிக்­கப்­ப­ட­லாம்.