தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

5ஜி தொழில்நுட்பம் இந்தியப் பொருளியலுக்கு $450பி. சேர்க்கும்

1 mins read
3557d650-264b-4a8f-a3e3-80213cfebe3b
-

புது­டெல்லி: 5ஜி தொழில்­நுட்­பம் அடுத்த 15 ஆண்­டு­களில் இந்­தி­யப் பொரு­ளி­ய­லுக்கு 450 பில்­லி­யன் டாலர் (சுமார் 34 லட்­சம் கோடி ரூபாய்) பங்­க­ளிக்­கும் என்று பிர­த­மர் மோடி தெரி­வித்து உள்­ளார்.

டிராய் எனப்­படும் தொலைத்­தொ­டர்பு ஒழுங்­கு­முறை ஆணை­யத்­தின் வெள்­ளி­விழா கொண்­டாட்­டத்­தில் பங்­கேற்று அவர் பேசி­னார். அடுத்த பத்­தாண்­டு­களில் 5ஜியைக் கடந்து 6ஜி தொழில்­நுட்­பத்­தைத் தொடங்­கும் இலக்கை இந்­தியா வகுத்­துள்­ளது என்­றும் அதற்­கான பணி­களில் தொழில்­நுட்­பக் குழுக்­கள் ஈடு­பட்டு வரு­வ­தா­க­வும் அவர் கூறி­னார்.

முன்­ன­தாக இந்­தி­யா­வின் எட்டு ஐஐடி கல்வி நிறு­வ­னங்­கள் உரு­வாக்­கிய '5ஜி டெஸ்ட் பெட்' என்­னும் 5ஜி சோத­னைக் கரு­வியை பிர­த­மர் மோடி தொடங்கி வைத்­தார்.அப்­போது பேசிய அவர், "நாம் சுய­மாக தயா­ரித்த 5ஜி தொழில்­நுட்­பத்தை நாட்­டுக்கு அர்ப்­ப­ணிக்­கும் வாய்ப்பு எனக்­குக் கிடைத்­துள்­ளது. இது நவீன தொழில்­நுட்­பத்­துக்­கான தன்­னி­றை­வில் ஒரு முக்­கி­ய­மான படி­யா­கும். 5ஜி தொழில்­நுட்­பம் நாட்­டின் ஆட்சி, வாழ்­வின் எளிமை, வர்த்­த­கம் போன்­ற­வற்­றி­லும் சாத­க­மான மாற்­றங்­க­ளைக் கொண்­டு­வ­ரும்.

"இந்­தி­யா­வில் இணை­யத்தை பயன்­ப­டுத்­து­ப­வர்­க­ளின் எண்­ணிக்கை வேக­மாக அதி­க­ரித்து வரு­கிறது. இந்­தி­யா­வில் மொபைல் உற்­பத்தி தொழிற்­சாலை இரண்­டில் இருந்து 200க்கும் மேல் விரி­வ­டைந்­துள்­ளது," என்றார் மோடி.