ஜம்மு: காஷ்மீர் பள்ளத்தாக்கில் நிகழ்ந்துவரும் வன்முறைச் சம்பவங்களுக்கு 'காஷ்மீர் ஃபைல்ஸ்' திரைப்படம்தான் காரணம் என முன்னாள் முதல்வர்கள் ஃபாருக் அப்துல்லாவும் மெஹபூபா முப்தியும் குற்றம் சாட்டியுள்ளனர். "காஷ்மீர் இளைஞர்கள் எப்படிப்பட்டவர்கள் என வெளியில் தவறாக காட்டப்படுவது அவர்களைக் கோபம் அடையச் செய்துள்ளது," என்றார் ஃபாருக் அப்துல்லா. "2016ஆம் ஆண்டு பதற்றமான சூழலிலும் ஒரு
கொலையும் நிகழவில்லை. 'காஷ்மீர் ஃபைல்ஸ்' போன்ற திரைப்படங்கள் வன்முறையை தூண்டியுள்ளன," என மெஹ பூபா முப்தி தெரிவித்துள்ளார்.

