500,000 மக்கள் பரிதவிப்பு

500,000 மக்கள் பரிதவிப்பு

2 mins read
3a4d2f4e-6c61-460a-8387-e105c50e2f09
அசாமின் டிமா ஹாசாவ் மாவட்டத்தில் நிகழ்ந்த நிலச்சரிவில் சிக்கி கவிழ்ந்த ரயில். படம்: ஏஎஃப்பி -

கவு­காத்தி: அசாம் மாநி­லத்­தில் ஏற்­பட்­டுள்ள மழை, வெள்ள பாதிப்பு மற்­றும் நிலச்­ச­ரிவு கார­ண­மாக 10 பேருக்கு மேல் உயிரிழந்தனர். பலரைக் காணவில்லை என மாநில அரசு வெளி­யிட்­டுள்ள அறிக்கை தெரி­விக்­கி­றது. இம்­மா­தம் 6ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை அசாம் மாநி­லத்­தில் 545.66 மில்­லி­மீட்­டர் மழை பதி­வா­கி­யுள்­ளது. கன­மழை கார­ண­மாக அசா­மின் 24 மாவட்­டங்­கள் வெள்­ளத்­தில் சிக்­கி­யுள்­ளன. இதனால் 500,000 பேர் அவதிப்பட்டு வருகின்றனர்.

அவர்­க­ள் தங்களது இருப்­பி­டத்­தை­விட்டு வெளி­யேறி வேறு இடங் களில் தஞ்சம் புகுந்துள்ளனர். 12,145 ஹெக்­டர் பரப்­பி­லான பயிர்­கள் நீரில் மூழ்­கி­விட்­டன. அங்­குள்ள கோப்ளி ஆறு ஏற்­கெ­னவே வெள்ள அபாய அள­வுக்கு மேல் சென்ற நிலையில் தற்­போது பிரம்­ம­புத்ரா நதி­யும் அபாய அளவை எட்­டி­யுள்­ளது. மாநி­லம் முழு­வ­தும் 55 நிவா­ரண முகாம்­கள் அமைக்­கப்­பட்டு அங்கு சுமார் 100,000 மக்­கள் தங்­க­வைக்­கப்­பட்­டுள்­ள­னர். மீட்­புப் பணி­களில் ராணு­வத்­து­டன் தேசிய பேரிடர் மீட்புக் குழு­வி­னர், மாநில பேரி­டர் மீட்­புக் குழு­வி­னர், தீய­ணைப்­புத் துறை­யி­னர் ஆகி­யோர் இணைந்து செயல்­பட்டு வரு­கின்­ற­னர்.

வெள்­ளம் சூழ்ந்­த­தால் திமா ஹசாவோ மாவட்­டம் முழு­மை­யா­கத் துண்­டிக்­கப்­பட்­டுள்­ளது. அங்­குள்ள சாலை­கள், ரயில் தடங்­கள் முற்­றாக சேத­ம­டைந்து போக்­கு

­வ­ரத்­துக்கு வழி­யின்றி முடங்­கி­யுள்­ளது. பெரும்­பா­லான மாவட்­டங்­களில் ரயில் சேவை முடங்­கி­யுள்ள நிலை­யில், நடுவழி­யில் சிக்­கிய 1,600 ரயில் பய­ணி­கள் ராணு­வத்­தி­னர் உத­வி­யு­டன் பத்­தி­ர­மாக மீட்­கப்­பட்­டுள்­ள­னர்.

ரத்து செய்­யப்­பட்ட ரயில்­களில் முன்­ப­திவு செய்­த­வர்­க­ளின் பய­ணக் கட்­ட­ணம் திருப்­பித் தரப்­பட்­டுள்­ளது. இது­வரை ரூ.8 லட்­சம் பய­ணக் கட்­ட­ணம் பய­ணி­க­ளி­டம் வழங்­ கப்­பட்­டுள்­ள­தாக இந்­திய ரயில்வே தெரி­வித்­துள்­ளது.

கடந்த சில ஆண்­டு­க­ளா­கவே அசா­மில் ஆண்­டு­தோ­றும் மழை, வெள்ள பாதிப்பு மாபெ­ரும் பேரி­ட­ராக உரு­வெ­டுத்­துள்­ளது. இந்­தாண்­டும் மே மாதமே அசாம் முதல் வெள்ள பாதிப்பை சந்­தித்­துள்­ளது. இதைத் தொடர்ந்து பருவ மழைக் காலம் வரும் என்­ப­தால் இது போன்ற பாதிப்­பு­கள் தொட­ருமோ என்ற அச்­சம் நிலவி வரு­கிறது. அசா­மைப் போலவே அதன் அண்டை மாநி­லங்­க­ளான மேகா­லயா, மிசோ­ரம், நாகா­லாந்து, மணிப்­பூர், அரு­ணா­சல பிர­தே­சம் ஆகிய மாநி­லங்­க­ளுக்­கும் கன மழை எச்­ச­ரிக்கை அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

அசாமில் வரலாறு காணாத மழை, வெள்ளம், நிலச்சரிவு; பலர் மரணம்; பயிர்கள் நாசம்