முக்கிய தலைவர் விலகல்: காங்கிரசுக்குப் பின்னடைவு

முக்கிய தலைவர் விலகல்: காங்கிரசுக்குப் பின்னடைவு

2 mins read
5a25dcbf-d8ff-4763-a52e-43077f2acb64
-

அக­ம­தா­பாத்: சட்­ட­மன்­றத் தேர்­தலை எதிர்­கொள்­ளத் தயா­ரா­கி­

வ­ரும் குஜ­ராத் மாநி­லத்­தில் காங்­கி­ரஸ் கட்­சி­யின் முக்­கிய தலை­வ­ரான ஹர்­திக் படேல் (படம்) நேற்று அக்­கட்­சி­யி­லி­ருந்து வில­கி­னார். இது அக்கட்­சிக்கு பெரும் பின்­ன­டை­வை ஏற்படுத்தியுள்ளது.

குஜ­ராத்­தில் இவ்­வாண்டு இறு­தி­யில் சட்­ட­மன்­றத் தேர்­தல் நடை­பெற உள்­ளது. இந்த மாநி­லத்­தில் படேல் சமூ­கத்­தி­னர் அதி­கம் வசிக்­கின்­ற­னர். இந்­தச் சமூ­கத்­தின் வாக்­கு­க­ளைப் பெறும் கட்­சியே ஆட்சி அமைக்­கும் நிலை உள்­ளது.

இந்த சமூ­கத்­தைச் சேர்ந்த ஹர்­திக் படேல் சில ஆண்­டு­

க­ளுக்கு முன் இட ஒதுக்­கீடு கேட்டு போராட்­டம் நடத்தி அனை­வ­ரின் கவ­னத்­தை­யும் ஈர்த்­தார்.

அதனைத் தொடர்ந்து காங்­கி­ரஸ் கட்சித் தலை­வர்­கள் ஹர்­திக் படேலை 2019ல் கட்­சி­யில் இணைத்­த­னர். அவ­ருக்கு குஜ­ராத் மாநில காங்­கி­ரஸ் கட்­சி­யின் செயல் தலை­வர் பதவி வழங்­கப்­பட்­டது. அதன் பின்­னர் காங்­கி­ரஸ் கட்­சி­யின் செல்­வாக்கு ஓர­ளவு அதி­க­ரித்து வந்­தது.

இருப்­பி­னும் கட்­சிக்­குள் கடந்த சில மாதங்­க­ளாக பூசல் நிலவி வந்­தது. கட்­சி­யின் தலைமை மீது அதி­ருப்­தி­யில் இருந்துவந்த ஹர்­திக் படேல் சில தினங்­க­ளுக்கு முன்­, 'செயல் தலை­வர்' என்­னும் சொற்களைத் தமது டுவிட்­டர் பதி­விலிருந்து நீக்­கி­னார். அப்­போதே இவர் வில­கி­வி­டு­வார் என்று ஊகத்­த­க­வல்­கள் பர­வத் தொடங்­கின.

கட்­சி­யி­லி­ருந்து வில­கு­வது தொடர்­பாக அவர் வெளி­யிட்­டுள்ள அறிக்­கை­யில், "காங்­கி­ரஸ் கட்­சி­யின் எல்­லாப் பத­வி­களில் இருந்­தும் வில­கி­விட்­டேன். வருங்­கா­லத்­தில் மக்­கள் நல­னுக்­காக உழைக்க விரும்­பு­கி­றேன்," என்று தெரி­வித்­துள்­ளார்.

தேர்­தல் நெருங்­கும் சம­யத்­தில் ஹர்­திக் படேல் வில­கி­யது பாஜ­க­வுக்கு சாத­க­மான நிலையை ஏற்

­ப­டுத்தி உள்­ளது. கூடிய விரை­யில் இவர் பாஜ­க­வில் இணை­ய­லாம் என்று கூறப்­ப­டு­கிறது.