புதுடெல்லி: தலைநகர் ெடல்லியின் ஒரு சில பகுதிகளில் இரவில் பெய்த மழை காரணமாக கடந்த புதனன்று பதிவான வெயில் சற்று தணிந்து இருந்தது.
இருப்பினும், நேற்றைய தினத் தைக் காட்டிலும் இன்று வெப்பத்தின் தாக்கம் சற்று அதிகரித்துக் காணப்படும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று 43 டிகிரி செல்சியசாக வெப்பநிலை உயரும் என்றும் அதே நேரத்தில் தலைநகரின் மற்ற சில பகுதிகளில் வெப்பநிலை 44-45 டிகிரி செல்சியசாக உயரக்கூடும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
1966ஆம் ஆண்டுக்குப் பிறகு டெல்லியிலும் உத்தரப் பிரதேசத்திலும் கடந்த ஞாயிறன்று (மே 15) அதிகபட்சமாக 49.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவான தாக தகவல்கள் குறிப்பிட்டிருந்தன.
இந்நிலையில், இந்த வெயிலில் இருந்து பாதுகாப்பு பெறும் வகை யில், டெல்லியில் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள நிழல் கூடங் களை மக்கள் நாடிச் செல்கின்றனர். வடகிழக்கு மாநிலமான அசாமில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, வட மாநிலங்களில் நிலவும் கடும் வெயில், அனல் காற்று பாதிப்பால் பலர் உயிரிழந்துள்ளனர்.