வெள்ளத்தில் 3,000 வீடுகள் நாசம்

வெள்ளத்தில் 3,000 வீடுகள் நாசம்

1 mins read
143ae74f-1a34-46f7-bfb2-16907c8df95a
-

பெங்­க­ளூரு: பெங்­க­ளூ­ரு­வில் வெளுத்து வாங்கி வரும் கன­ம­ழை­ காரணமாக 3,000க்கும் ேமற்­பட்ட வீடு­க­ளுக்­குள் மழைநீர் புகுந்­ததில் பாத்­தி­ரங்­கள், உண­வுப் பொருள்­கள் நீரில் அடித்­துச் செல்­லப்­பட்டன. இத­னால், பொது­மக்­கள் பெரும் அவ­திக்கு ஆளா­கி­னர்.

இங்குள்ள எச­ர­கட்­டா­ தனி­யார் மருத்­து­வ­ம­னைக்­குள்ளும் மழை­நீர் புகுந்­த­தால் சிகிச்சை பெற்று வந்த நோயா­ளி­கள் தற்­கா­லி­க­மாக வேறு இடங்­க­ளுக்கு மாற்­றப்­பட்­ட­னர்.

எண்­ணூர், மல்­லேஸ்­வ­ரம் பகுதி­யில் சூறா­வளிக் காற்­று­டன் பெய்த கனமழை கார­ண­மாக மரங்­கள் முறிந்து விழுந்­தன.

மழை­யால் பாதிக்­கப்­பட்ட இடங்­களை ஆய்வு செய்த அம்­மா­நில முதல்­வர் பச­வ­ராஜ் பொம்மை, "மழை­நீரை அகற்ற நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்ளது. வெள்ளத்தால்­ பாதிக்­கப்­பட்ட ஒவ்­வொரு குடும்­பத்துக்கும் தலா ரூ.25,000 நிவா­ரண நிதி­ வழங்­கப்­படும்," என்­றார்.

பெங்­க­ளூ­ரு­வில் கன­ம­ழையால் இரு­வர் உயி­ரி­ழந்த நிலை­யில், அடுத்த மூன்று நாள்­க­ளுக்கு கன­மழை நீடிக்­கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்­ச­ரித்­துள்­ளது.