நடுவானில் பழுதடைந்த ஏர் இந்தியா விமானம்

நடுவானில் பழுதடைந்த ஏர் இந்தியா விமானம்

1 mins read
2aab8366-b197-4bf1-a373-9401fa8490d2
-

மும்பை: ஏர் இந்­தியா விமான நிறு­வ­னத்­தின் 'ஏர்­பஸ் ஏ-320 நியோ' என்ற விமா­னம் ஒன்று பெங்­க­ளூர் செல்­வ­தற்­காக மும்பை விமான நிலை­யத்­தில் இருந்து கிளம்­பி­யது.

ஆனால் பறக்­கத்­தொ­டங்­கிய 27 நிமி­டங்­களில் அந்த விமா­னத்­தின் இயந்­தி­ரம் திடீ­ரென்று பழு­த­டைந்து நின்­று­விட்­டது.

அப்­போது நிலை­மையை சாமர்த்­தி­ய­மாகச் சமா­ளித்த விமானி, விமா­னத்தை பாது­காப்­பாக மும்பை விமான நிலை­யத்­தி­லேயே தரையிறக்­கி­னார்.

இதை­ய­டுத்து அந்த விமா­னத்­தில் இருந்த பய­ணி­கள் பாது­காப்­பாக வேறு ஒரு 'ஏர் இந்­தியா' விமா­னத்­தில் ஏற்றி பெங்­க­ளூ­ரு­வுக்கு அனுப்பி வைக்­கப்­பட்­ட­னர்.

இந்­தச் சம்­ப­வம் குறித்து சிவில் விமா­னப் போக்­கு­வ­ரத்­தின் ஒழுங்கு­முறை இயக்­கு­ந­ர­கம் விசா­ரணை நடத்தி வரு­கிறது.

இது குறித்து கருத்து தெரி­வித்த ஏர் இந்­தியா, நாங்­கள் பய­ணி­க­ளின் பாது­காப்­புக்கு முன்­னு­ரிமை வழங்­கு­கி­றோம் என்று கூறி­யது.

"எங்­க­ளு­டைய விமா­னி­கள், ஊழி­யர்­கள் இது போன்ற பிரச்­சி­னை­களை சிறப்­பாக கையாள நன்கு பயின்­ற­வர்­கள். எங்­கள் நிறு­வ­னம் இந்­தச் சம்­ப­வம் குறித்து ஆராய்ந்து வரு­கிறது," என்று மேலும் அது தெரி­வித்­தது.