புதுடெல்லி: மொழியை வைத்து சர்ச்சைகளைக் கிளப்ப முயற்சி நடைபெறுகிறது என்று பிரதமர் மோடி பேசியுள்ளார்.
சில நாட்களாக இது நடந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டு உள்ளார்.
ராஜஸ்தானில் நடந்த பா.ஜ.க. நிர்வாகிகள் கூட்டத்தில் அவர் காணொளி வழியாகப் பேசினார்.
"கடந்த சில நாட்களாக மொழியை வைத்து சர்ச்சைகளைக் கிளப்பும் முயற்சிகள் நடப்பதை பார்க்கிறோம்.
"ஒவ்வொரு பிராந்திய மொழி களையும் இந்திய கலாசாரத்தின் பிரதிபலிப்பாகவும் வணங்குவதற்கு மதிப்புள்ளதாகவும் பாரதிய ஜனதா கருதுகிறது.
"புதிய தேசிய கொள்கையில் அனைத்து வட்டார மொழிகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு உள்ளது.
"மொழிகளை, நாட்டின் சிறந்த எதிர்காலத்திற்கான இணைப்பாக பாரதிய ஜனதா கருதுகிறது. சுதந்திரம் அடைந்த பிறகு, குடும்ப கட்சிகள் ஊழல், மோசடி என நாட்டின் மதிப்புமிக்க நேரத்தை வீணடித்துள்ளன," என்று திரு ேமாடி தெரிவித்தார்.
"பாஜக அரசு இம்மாதத்துடன் எட்டு ஆண்டுகளை நிறைவு செய் கிறது. இத்தனை வருடங்கள் தேசத்திற்கு சேவை செய்வதாகவும் ஏழைகள் மற்றும் நடுத்தர மக்களின் நலனுக்காக உழைத்து சமூக நீதி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வ தாகவும் பெண்களின் அதிகாரத்தை வலுப்படுத்துவதாகவும் இந்த அரசு அமைந்து வருகிறது.
உலகமே இன்று இந்தியாவை பெரும் எதிர்பார்ப்புடன் பார்க்கிறது. நம் நாட்டு மக்கள் பாஜகவை மிகுந்த நம்பிக்கையுடன் பார்க்கின்றனர்," என்று அவர் குறிப்பிட்டு உள்ளார்.
பாரதிய ஜனதா கட்சி அடுத்த 25 ஆண்டுகளுக்கு இலக்கு நிர்ணயிக்க வேண்டிய தருணம் இது என்று பிரதமர் மோடி மேலும் தெரிவித்தார்.