தோக்கியோ 'குவாட்' மாநாட்டில்
பிரதமர் மோடி பங்கேற்கிறார்
புதுடெல்லி: தோக்கியோவில் வரும் 24ஆம் ேததி நடை பெறும் 'குவாட்' மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நான்கு நாடுகள் 'குவாட்' எனும் அமைப்பில் அங்கம் வகிக்கின்றன. இந்த அமைப்பின் உச்சநிலை மாநாடு, ஜப்பான் தலைநகர் தோக்கியோவில் இம்மாதம் 24ஆம் தேதி நடைபெறுகிறது. அதில் பிரதமர் மோடி கலந்து கொள்வதாக மத்திய வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி தெரிவித்தார்.
"இந்தோ-பசிபிக் வட்டார நிலவரம் மற்றும் பரஸ்பர நலன் சார்ந்த உலக பிரச்சினைகள் குறித்து 'குவாட்' தலைவர்கள் கருத்து பரிமாற்றம் செய்துகொள்ள இம் மாநாடு நல்ல வாய்ப்பாக அமையும். ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆகியோரை பிரதமர் மோடி தனித்தனியாக சந்திக்க விருக்கிறார். ஆஸ்திரேலியப் பிரதமர் ஸ்காட் மோரி சனையும் திரு மோடி சந்திக்க வாய்ப்புள்ளது," என்று அந்த பேச்சாளர் சொன்னார்.
காஷ்மீர் பிரிவினைவாத
தலைவர் யாசின் குற்றவாளி
புதுடெல்லி: காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர் முகமது யாசின் மாலிக், அவரது கூட்டாளிகள் மீது டெல்லியில் உள்ள என்.ஐ.ஏ. நீதிமன்றத்தில் பயங்கரவாத, பிரிவினைவாத குற்றச்சாட்டுகளுடன் சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்பு சட்டப்படி வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் கடந்த மார்ச் மாதம் யாசின் மாலிக் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டபோது அவர் தன் மீதான குற்றச்சாட்டை மறுக்கவில்லை என தெரிவித்தார்.
இந்த நிலையில் யாசின் மாலிக் குற்றவாளி என என்.ஐ.ஏ. நீதிமன்றம் நேற்று முன்தினம் தீர்ப்பு அளித்தது. அவர் மீதான தண்டனை விவரம் 25ஆம் தேதி அறிவிக்கப்படும்.
இந்த வழக்கில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் நிறுவனர் ஹபீஸ் சையத்தும் ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்கத்தின் தலைவர் சையத் சலாகுதீனும் தலைமறைவுக் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
விமானத்தில் ரூ.67 லட்சம்
மதிப்புள்ள தங்கம் கடத்தல்
மங்களூரு: துபாயில் இருந்து மங்களூருவுக்கு வியாழக்கிழமை காலை வந்த இரண்டு விமானங்களில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து அந்த விமானங்களில் வந்த பயணிகளையும் அவர்களின் உடைமைகளையும் அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்தனர். அப்போது ஒருவர் தங்கத்தை உடைமைக்குள் மறைத்து வைத்து கடத்தி வந்ததும், மற்றொருவர் வயிற்றுக்குள் மறைத்து வைத்து கடத்தி வந்ததும் தெரியவந்தது.
இரண்டு பேரிடமும் இருந்து முறையே 814 கிராம், 547 கிராம் என மொத்தம் ஒரு கிலோ 361 கிராம் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு ரூ.67 லட்சம் ஆகும். இதையடுத்து கேரளாவைச் சேர்ந்த இரண்டு பேரையும் காவல்துறையினனர் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

