ஹைதராபாத்: ஹைதராபாத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த பாலியல் வன்கொடுமை வழக்குத் தொடர்பில், குற்றம் சாட்டப்பட்ட நால்வரும் போலி என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டதாக விசாரணை ஆணையம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
இளையர்களைச் சுட்டுக் கொன்ற 10 காவலர்கள் மீது கொலை வழக்குப் பதியவும் ஆணையம் பரிந்துரைத்துள்ள நிலையில், இவர்கள் அனைவரும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
தெலுங்கானா மாநிலம், ேடாண்டுப்பள்ளியில் உள்ள சுங்கச் சாவடி அருகே கடந்த 2019ல் 27 வயதான கால்நடை மருத்துவர் திஷா, கூட்டுப் பாலியல் பலாத்காரம் ெசய்யப்பட்டு, கொடூரமான முறையில் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டார்.
இந்த வழக்கில் தொடர்புடைய நான்கு இளையர்களை ஹைதராபாத் காவல்துறையினர் 24 மணி நேரத்திற்குள் கைது செய்தனர்.
அதன்பின்னர், 2019 டிசம்பர் 6ஆம் ேததி குற்றம் நடந்த இடத்தில் தடயங்களைச் சேகரிப்பதற்காக அவர்களை அழைத்துச் சென்ற காவல்துறையினர், தப்ப முயன்றதாகக் கூறி அவர்களை என்கவுண்டர் செய்தனர்.
ஆனால், இது போலி என்கவுண்டர் என ஹைதராபாத் உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டதால், மூவர் கொண்ட விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.
இதுகுறித்து உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட நீதிபதி சில்புர்கர் ஆணையம் விசாரணை நடத்தி வந்த நிலையில், "இது போலி என்கவுண்டர்தான். உதவி ஆணையர் உள்ளிட்ட 10 காவலர்கள் திட்டமிட்டு குற்றவாளிகளைக் கொன்றுள்ளனர்," என நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
காவலர்கள் தரப்பில் இந்தக் குற்றச்சாட்டை மறுத்தாலும் அதற்கான ஆதாரங்கள் இல்லை என்பதால் அவர்கள் மீது வழக்குப் பதியப்பட உள்ளது.