புதுடெல்லி: ஒரே மாதத்தில் எட்டாயிரம் மீட்டர் உயரமுள்ள நான்கு மலைகள் மீது ஏறி சாதனை படைத்துள்ளார் இளம் மலையேற்ற வீராங்கனை எம்.எஸ். கவுர்.
27 வயதான இவர், இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்தவர். உலகின் நான்காவது உயரமான மலையான லோட்சே மலையையும் வெற்றிகரமாக ஏறி முடித்துள்ளார் எம்.எஸ்.கவுர்.
இதன் மூலம் கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி தொடங்கி, அடுத்தடுத்து அன்னபூர்ணா, கஞ்சன்ஜங்கா, எவரெஸ்ட் சிகரம், லோட்சே மலை என அடுத்தடுத்து எட்டாயிரம் மீட்டர் உயரமுள்ள நான்கு மலைகளிலும் ஏறி சாதனை படைத்துள்ளார் எம்.எஸ்.கவுர்.
இதற்கிடையே, கேரளாவின் இடுக்கி மாவட்ட வளர்ச்சி ஆணையர் அர்ஜூன் பாண்டியன் என்பவர், உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள 5,760 மீட்டர் உயரம் கொண்ட திரெளபதி காதண்டா 2 சிகரத்தில் ஏறி சாதனை படைத்துள்ளார். எவரெஸ்ட் உள்பட பல்வேறு சிகரங்களில் ஏறி இந்திய தேசியக் கொடியை நட வேண்டும் என்பது தமது லட்சியம் என அவர் தெரிவித்துள்ளார்.