தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நாடாளுமன்றத் தேர்தலுக்குத் தயாராகும் காங்கிரஸ்; அரசியல் விவகாரக்குழு அமைப்பு

2 mins read
158a3a15-1cd3-4f3f-9159-45edd3ede9cd
-

சென்னை: 2024ஆம் ஆண்டு நடை­பெற உள்ள மக்­க­ள­வைத் தேர்­தலை எதிர்­கொ­ள்­ளும் வகை­யில் காங்­கிரஸ் கட்­சி­யின் அர­சி­யல் விவ­கா­ரக்­குழு, சிறப்­புப் பணிக்­கு­ழுவை அமைத்­துள்­ளார் சோனியா காந்தி.

அர­சி­யல் விவ­கா­ரக் குழு­வில் மாநி­லங்­க­ளவை முன்­னாள் எதிர்க்­கட்­சித் தலை­வர் குலாம் நபி ஆசாத், துணைத் தலை­வர் ஆனந்த் சர்மா, தேர்­தல் வியூ­கர் நிபு­ணர் சுனில் கனு­கோலு ஆகி­யோர் இடம்­பெற்­றுள்­ள­னர்.

இக்குழு முடி­வெ­டுக்­கும் அமைப்­பாக இருக்­காது என்று சோனியா காந்தி தெரி­வித்­துள்­ளார். மேலும், அந்­தக்­குழு முக்­கிய நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­வ­தில் தமக்கு உத­வும் என்று அவர் கூறி­யுள்­ளார்.

இதே­போல், சிறப்­புப் பணிக்­கு­ழு­வுக்கு முன்­னாள் மத்­திய நிதி­ய­மைச்­சர் ப.சிதம்­ப­ரம் தலை­மை­யேற்­பார் என்­றும் ராகுல் காந்தி, மல்­லி­கார்­ஜூன கார்கே, அம்­பிகா சோனி, திக்­வி­ஜய் சிங், முகுல் வாஸ்­னிக், பிரி­யங்கா காந்தி ஆகி­யோர் இக்­கு­ழு­வில் இடம்­பெ­று­வர் என்றும் சோனியா அறி­வித்­துள்­ளார்.

இதற்­கி­டையே, மக்­க­ளுக்­கும் காங்­கி­ரஸ் கட்­சிக்­கும் இடை­யே­யான தொடர்பை வலுப்­ப­டுத்­தும் வகை­யில் குமரி முதல் காஷ்­மீர் வரை­யி­லான தேசிய யாத்­திரை ஒன்று காங்­கி­ரஸ் சார்­பில் நடை­பெற உள்­ளது. சுமார் ஆறு மாதங்­க­ளுக்கு நீடிக்­கும் யாத்­தி­ரை­யின்­போது அதில் பங்­கேற்­போர் 12 மாநி­லங்­க­ளுக்­குச் செல்­வர் என்­றும் 3,500 கிலோ மீட்­டர் தூரத்­தைக் கடப்­பர் என்­றும் கூறப்படுகிறது.

இதற்­கி­டையே, காங்­கி­ரஸ் கட்­சி­யின் மூத்த தலை­வ­ரான கபில் சிபல் (படம்) அக்­கட்­சி­யில் இருந்து வில­கு­வ­தாக அறி­வித்­துள்­ளார். மேலும், மாநி­லங்­க­ள­வைத் தேர்­த­லில் உத்­த­ரப் பிர­தே­சத்­தில் இருந்து சுயேட்சை வேட்­பா­ள­ராகப் போட்­டி­யிட அவர் மனுத்­தாக்­கல் செய்­துள்­ளார். இதை­ய­டுத்து, செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய அவர், இனி தனது குரல் சுதந்­தி­ர­மாக ஒலிக்க வேண்­டும் என விரும்­பு­வ­தாக தெரி­வித்­தார்.

பிர­த­மர் மோடி தலை­மை­யி­லான ஆட்­சியை அகற்ற வலு­வான கூட்­டணி தேவை என்­றும் எதிர்க்­கட்­சி­கள் இதை மன­திற்­கொள்ள வேண்­டும் என்­றும் கபில் சிபல் கூறி­னார். இதற்­கி­டையே, மாநிலங்­க­ளவைத் தேர்­த­லில் அவ­ருக்கு சமாஜ்­வாடி கட்சி ஆத­ரவு தரவுள்­ளது.