தங்கைக்காக தலைநகர் போகும் அண்ணன்; நீதி கேட்டு வண்டி மாடுகளும் நடக்கின்றன

தங்கைக்காக தலைநகர் போகும் அண்ணன்; நீதி கேட்டு வண்டி மாடுகளும் நடக்கின்றன

2 mins read
e2a347a8-4fc4-4688-9328-010460e0c72c
தங்கைக்காக நீதி கேட்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர முடிவு செய்து ஆந்திராவில் இருந்து டெல்லிக்குப் புறப்பட்ட அண்ணனின் மாட்டு வண்டி. படம்: இந்திய ஊடகம் -

விஜ­ய­வாடா: கண­வன், மாமி­யார், நாத்­த­னார் கொடுமை தாங்­கா­மல் தன் தங்கை பிறந்த வீட்­டுக்கே வந்­து­விட்­ட­தா­க­வும் அவ­ருக்­காக நீதி கேட்டு மாட்டு வண்­டி­யில் தானும் தங்­கை­யும் தங்­கள் தாயாரும் உச்ச நீதி­மன்­றத்தை நாடி புதுடெல்­லிக்­குப் புறப்­பட்டுப் போவ­தா­க­வும் ஆந்­திரா­வைச் சேர்ந்த விவ­சாயி ஒரு­வர் தெரி­வித்­தார்.

தேசிய சகோ­த­ரர் தினம் கடந்த செவ்­வாய்க்­கி­ழமை கொண்­டாடப்­பட்­டது. அன்­றைய நாளில் இரட்டை மாட்டு டயர் வண்­டி­யில் தாயா­ரான ஜோதி, தங்கை நவ்­யதா, 28, இரு­வரை­யும் ஏற்­றிக்­கொண்டு ஆந்­தி­ரா­வின் விஜ­ய­வா­டா­வில் இருந்து தான் புறப்­ப­ட்டுச் செல்­வ­தாக நாக துர்கா ராவ் என்ற அந்த விவ­சாயி செய்­தி­யா­ளர்­க­ளி­டம் கூறி­னார்.

"தலை­ந­கர் சென்று உச்ச நீதி­மன்­றம், தேசிய மனித உரிமை ஆணை­யம் இரண்­டி­லும் வழக்­குத் தொடுக்­கப்­போ­கி­றோம். அங்­கேயே இருந்து வழக்கை முடித்­துக் கொண்­டு­தான் நாங்­கள் ஊர் திரும்­பு­வோம்," என்று ராவ் மேலும் தெரி­வித்­தார்.

இவ­ரின் சகோத­ரி­யான நவ்­ய­தா­வுக்­கும் நரேந்­திர நாத் என்­ப­வருக்­கும் 2018ல் திரு­ம­ணம் நடந்­தது. "ரூ.23 லட்­சம், 320 கிராம் தங்க நகை­கள், வெள்­ளி­யில் ஆன பூசை பொருள்­கள், மூன்று ஏக்­கர் விவ­சாய நிலம் ஆகி­யவை வர­தட்­ச­ணை­யாக மண­ம­க­னுக்குக் கொடுக்­கப்­பட்­டது.

"ஆனால் கண­வர் குடி­கா­ரர். மனை­வியை நாள்­தோ­றும் அடித்து கொடுமைப்­ப­டுத்துவார். அதற்கு மாமி­யார், நாத்­த­னார் எல்­லா­ரும் உடந்தை.

"என் தங்கை அடி, உதை, கொடுமை தாங்க முடி­யா­மல் பிறந்த வீட்­டுக்கு வந்­து­விட்­டார்.

"ஆந்­தி­ரா­வில் காவல்­து­றை­யில் புகார்­ கொ­டுத்­தோம். ஆனால் மாப்­பிள்ளை வீட்­டா­ருக்கு ஆந்­தி­ரா­வில் ஆளும் கட்­சி­யி­ன­ரின் ஆத­ரவு இருப்­ப­தால் வழக்கை பதி­யக்­கூட காவல் துறை மறுத்­து­விட்­டது. ஆகை யால் என் தங்­கைக்­காக நான் நடக்­கி­றேன். என் தாயா­ரும் தங்­கை­யும் உடன் வரு­கி­றார்­கள்.

"எங்­க­ளுக்­காக நீதி கேட்டு வாயில்லா ஜீவன்­க­ளான எங்­கள் வண்டி மாடு­களும் நடக்­கின்­றன," என்று தங்கைக்காக நீதி கேட்டு நடக்கும் அந்த அண்­ணன் கண்­ணீர்­மல்க கூறி­னார்.