புதுடெல்லி: இந்தியாவில் கோதுமை தட்டுப்பாடு நிலவுவதாகக் கூறப்படுவது உண்மை அல்ல என்று மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிக் தோமர் தெரிவித்துள்ளார்.
கோதுமையை அதிக அளவில் ஏற்றுமதி செய்வதை தடுக்கவே திடீர் தடை விதிக்கப்பட்டது என்று அவர் விளக்கம் அளித்துள்ளார்.
கோதுமை ஏற்றுமதிக்கு மத்திய அரசு கடந்த 14ஆம் தேதி தடை விதித்தது. உள்நாட்டில் கோதுமை விலையும் உணவுப் பணவீக்கமும் உயர்வதைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தில் இந்த தடை விதிக்கப்பட்டது.

