கார்த்தி: இந்த விசாரணை டெஸ்ட் கிரிக்கெட் போன்றது

கார்த்தி: இந்த விசாரணை டெஸ்ட் கிரிக்கெட் போன்றது

1 mins read
5a411178-4520-4ed8-8fa4-7ee2d28cd559
-

புது­டெல்லி: விசா முறை­கேடு தொடர்­பாக காங்­கி­ரஸ் எம்பி கார்த்தி சிதம்­ப­ரத்­தி­டம் தொடர்ந்து மூன்­றா­வது நாளாக சிபிஐ அதி­கா­ரி­கள் விசா­ரணை மேற்­கொண்­ட­னர்.

இது தொடர்­பாக செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய அவர், இந்த விவ­கா­ரம் தொடர்­பாக தாம் மக்­க­ளவை சபா­நா­ய­க­ருக்கு கடி­தம் எழுதி இருப்­ப­தா­கக் குறிப்­பிட்­டார்.

"இந்த விசா­ரணை ஒரு டெஸ்ட் கிரிக்­கெட் போட்டி போன்­றது. ஐந்து நாள்­கள் தொடர்ந்து நடக்­கும். இது மூன்­றா­வது நாள்," என்­றார் கார்த்தி சிதம்­ப­ரம்.

முன்னதாக மத்­திய அர­சு­டன் இணைந்து விசா­ரணை அமைப்­பு­கள் தன்­னை­யும் தமது குடும்­பத்தையும் குறி­வைத்து செயல்­ப­டு­வ­தாக கார்த்தி சிதம்­ப­ரம் சாடி­யுள்ளார்.

தனது குடும்­பத்தை மவு­ன­மாக்­கும் நோக்­கத்­து­டன் கடந்த சில ஆண்­டு­க­ளாக விசா­ரணை அமைப்­பு­களும் மத்­திய அர­சும் தொடர்ச்­சி­யான பல்­வேறு நட­வ­டிக்­கை­களை எடுத்து வரு­வ­தாக மக்­க­ளவை சபா­நா­ய­கர் ஓம் பிர்­லா­வுக்கு எழுதி உள்ள கடி­தத்­தில் அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

தன் மீது புனை­யப்­பட்­டுள்ள இந்த வழக்­கா­னது, நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் மீது அவை­யின் உரிமையை மீறிய ஒரு செய­லா­கக் கரு­தப்­பட வேண்­டும் என்று குறிப்பிட்­டுள்ள அவர், நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக தன்­னு­டைய நட­வடிக்கை­யில் சிபிஐ குறுக்­கீடு செய்வது ஜன­நா­யக நடை­மு­றை­கள் மீதான நேரடித் தாக்­கு­தல் என்­றும் தெரி­வித்­துள்­ளார்.