புதுடெல்லி: ரஷ்யாவில் இருந்து முன் எப்போதும் இல்லாத அளவில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் கச்சா எண்ணெய் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதர உலக நாடுகள் பலவும் உக்ரேன் மீது போர் தொடுத்ததால் ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்திவிட்டன.
இத்தகைய சூழலில் 74 முதல் 79 மில்லியன் பேரல்கள் அளவிலான எண்ணெய்யை இந்தியாவுக்கும் சீனாவுக்கும் கப்பல் மூலம் அனுப்பி வைத்துள்ளது ரஷ்யா.
உக்ரேன் போருக்கு முன்பு கடந்த பிப்ரவரி மாதம் 27 மில்லியன் பேரல் எண்ணெய்யை வாங்கி இருந்த நிலையில், தற்போது கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகமாகி உள்ளது.
இதன் மூலம் ரஷ்யாவிடம் இருந்து அதிக அளவு எண்ணெய் கொள்முதல் செய்த ஐரோப்பிய நாடுகளை ஆசியா பின்னுக்குத் தள்ளியுள்ளது.
மிகக் குறைந்த விலையில் எண்ணெய் விநியோகத்தை ரஷ்யா அறிவித்ததை அடுத்து, சீனாவும் இந்தியாவும் மில்லியன் கணக்கான எண்ணெய் பேரல்களை வாங்கி வருகின்றன.
இதனால் பல்வேறு கடல் பாதைகளில் எண்ணெய்க் கப்பல்களின் போக்குவரத்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக, ரஷ்யாவில் வடக்கு துறைமுகங்களில் இருந்து ஆசியாவுக்கு அதிக அளவில் எண்ணெய் கொண்டு செல்லப்படுகிறது. இந்நிலை மேலும் சில மாதங்கள் நீடிக்கக்கூடும்.

