தஞ்சை மகளிர்க்கு பாராட்டு

தஞ்சை மகளிர்க்கு பாராட்டு

2 mins read
7a0a456b-2f81-463d-8c37-7472d8c1051f
-

புது­டெல்லி: தஞ்­சா­வூர் மக­ளிர் சுய­உ­த­விக் குழு­வி­னரை பிர­த­மர் மோடி பாராட்­டி­யுள்­ளார்.

வானொலி வாயி­லாக நேற்று மன­தின் குரல் (மன் கி பாத்) நிகழ்ச்­சி­யில் உரை­யாற்­றிய அவர் கூறு­கை­யில், "ஊர­கப் பகு­தி­களில் புதிய தொழில் முனை­வோர்­களை உரு­வாக்­கு­வ­தில் தமி­ழ­கத்­தைச் சேர்ந்த ஸ்ரீதர் வேம்பு முக்­கிய பங்கு வகித்து வரு­கி­றார்," என்றார்.

மேலும், "தஞ்­சா­வூ­ரைச் சேர்ந்த மக­ளிர் சுய­உ­த­விக் குழு­வி­னர், புவி­சார் குறி­யீடு பெற்ற தஞ்­சா­வூர் தலை­யாட்டி பொம்­மை­கள் மட்­டு­மின்றி இதர பொருள்களை­யும் சிறப்­பாக விற்று வரு­கின்­ற­னர்.

"தஞ்­சா­வூர் பொம்­மையை அவர்­கள் எனக்­குப் பரி­சாக அனுப்­பி­னார்­கள். அந்­தப் பரி­சில் பாரத நாட்­டின் மணம் வீசு­கிறது. தாய்மை சக்­தி­யின் ஆசி நிரம்பி யிருக்­கிறது. வட்­டார கலாசார மணம் வீசும் பரிசை எனக்கு அனுப்­பி­ய­மைக்கு, நான் தஞ்­சா­வூர் சுய­உ­த­விக் குழு­விற்கு எனது சிறப்­பான நன்­றி­யைத் தெரி­வித்­துக்­கொள்­கி­றேன்.

"இந்த தஞ்­சா­வூர் பொம்மை எத்­தனை அழ­கா­ன­தாக இருக்­கி­றதோ, அத்­தனை அழ­கா­னது பெண்­க­ளின் அதி­கா­ரப் பங்­க­ளிப்­பின் புதிய பய­ணம். இந்த மக­ளிர் சுய­உத­விக் குழுக்­கள், பெண்­க­ளின் சுய­சேவை சமூ­கமே நடத்­தும் அங்­கா­டியை, தஞ்­சா­வூ­ரின் பிர­தா­ன­மான இடத்­திலே திறந்­தி­ருக்­கின்­றார்­கள்.

"இதன் பரா­ம­ரிப்­புப் பொறுப்பு முழு­வ­தை­யுமேகூட இந்­தப் பெண்­களே ஏற்­றி­ருக்­கின்­றார்­கள்.

"ஒரு கடை­யின் மூல­மாக புவி­சார் குறி­யீட்­டோடு, கை

வி­னைப் பொருள்க­ளின் விற்­

ப­னை­யில் கணி­ச­மான முன்­னேற்­றம் காணக் கிடைக்­கிறது. இந்த முயற்சி கார­ண­மாக, கைவி­னை­ஞர்­க­ளுக்கு மட்­டு­மல்­லா­மல், பெண்­க­ளின் வரு­வா­யும் அதி­

க­ரிப்­ப­தால் அவர்­க­ளின் அதி­கா­ரப் பங்­க­ளிப்­பும் ஏற்­ப­டு­கிறது," என்­றார் மோடி.

மோடி: எனக்கு வழங்கிய பரிசில் தாய்மையின் ஆசி உள்ளது