போபால்: மத்தியப் பிரதேசத்தில் உள்ள மன்டலா மாவட்டத்தில் சிங்கார்பூர் என்ற பகுதி உள்ளது.
பழங்குடி மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியான இங்கு நேற்று முன் தினம் பானி பூரி திருவிழா நடத்தப்பட்டது.
இதில் அக்கம் பக்கத்திலுள்ள கிராமங்களில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்று பானி பூரி சாப்பிட்டனர். இந்நிலையில், பானி பூரி விழாவில் சாப்பிட்ட பல்வேறு குழந்தைகளுக்கு அன்று மாலை உடல் நலக்குறைவு ஏற்பட்டது. நச்சுணவு காரணமாக பல குழந்தைகள் வாந்தி, வயிற்று வலியால் பாதிக்கப்பட்டன. 97 குழந்தைகள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் ஒரே கடையில் பானி பூரி சாப்பிட்டது தெரியவந்ததால் காவல்துறையினர் கடை உரிமையாளரைக் கைது செய்து உணவுப்பொருள்களைக் கைப்பற்றினர்.