பிரபல பஞ்சாப் பாடகர் சித்து மூஸ்வாலா சுட்டுக்கொலை

பிரபல பஞ்சாப் பாடகர் சித்து மூஸ்வாலா சுட்டுக்கொலை

1 mins read
c9709460-bc5b-41b6-a048-16ec4bb1320e
பாடகர் சித்து. படம்: ஊடகம் -

சண்­டி­கர்: பிர­பல பாட­கர் சித்து மூஸ்­வாலா படு­கொலை செய்­யப்­பட்­டது அவ­ரது ரசி­கர்­களை கடும் அதிர்ச்­சி­யில் ஆழ்த்தி உள்­ளது.

இதை­ய­டுத்து, பஞ்­சாப் மாநில அர­சைக் கலைக்க வேண்­டும் என காங்­கி­ரஸ் கட்சி வலி­யு­றுத்தி உள்­ளது.

27 வய­தான சித்து, நேற்று முன்­தி­னம் ஜீப் வாக­னத்­தில் தனது கிரா­மம் நோக்­கிச் சென்றுகொண்­டி­ருக்­கும்­போது, அடை­யா­ளம் தெரி­யாத சிலர் அவ­ரைப் பின்­தொ­டர்ந்து சென்று சுட்­டுக்­கொன்­ற­னர்.

பஞ்­சாப் அரசு சித்­து­வுக்கு வழங்­கப்­பட்டு வந்த பாது­காப்பை திரும்­பப்­பெற்ற இரு தினங்­களில் அவர் சுட்­டுக்­கொல்­லப்­பட்­டுள்­ளார்.

அண்­மை­யில் நடந்து முடிந்த பஞ்­சாப் சட்­டப்­பே­ர­வைத் தேர்­த­லில், மன்சா தொகு­தி­யில் போட்­டி­யிட்டு ஆம் ஆத்மி கட்­சி­யின் விஜய் சிங்லா­வி­டம் மூஸ்­வாலா தோல்வி கண்­டார்.

இதற்­கி­டையே, சித்­து­வைக் கொன்­ற­வர்­கள் உரிய தண்­டனை பெறு­வதை ஆம் ஆத்மி உறுதி செய்­யும் என டெல்லி முதல்­வர் கெஜ்­ரி­வால் தெரி­வித்­துள்­ளார்.