மூன்று வேளையும் 'நூடல்ஸ்': விவாகரத்தில் முடிந்த திருமணம்

மூன்று வேளையும் 'நூடல்ஸ்': விவாகரத்தில் முடிந்த திருமணம்

1 mins read
667b022c-0114-41b4-bc9d-d19493dce1b9
-

பெங்­க­ளூரு: மூன்று வேளை­யும் 'நூடல்ஸ்' மட்­டுமே சமைத்த மனை­வியை விவா­க­ரத்து செய்­துள்­ளார் ஆட­வர் ஒரு­வர்.

தின­மும் காலை, மதி­யம், இரவு உண­வாக வெறும் 'நூடல்ஸ்' மட்­டுமே சமைத்த மனை­வி­யி­டம், அதற்­கான கார­ணத்­தைக் கேட்­ட­போது, தமக்கு அது மட்­டுமே சமைக்­கத் தெரி­யும் என்று மனைவி கூறி­யுள்­ளார். இதை­ய­டுத்து, இரு­வ­ரும் விவா­க­ரத்து செய்­து­கொள்ள ஒரு­ம­ன­தாக முடி­வெ­டுத்­துள்­ள­னர்.

தாம் விசா­ரித்த விவா­க­ரத்து வழக்­கு­களில் இது­வும் ஒன்று என்று கர்­நா­டக மாநி­லம் பெல்­லாரி மாவட்ட நீதி­ப­தி­யா­கப் பணி­யாற்­றிய எம்.எல்.ரகு­நாத் தெரி­வித்­துள்­ளார்.

இப்­போ­தெல்­லாம் அற்ப கார ணங்களுக்­காக விவா­க­ரத்து செய்­வோர் எண்­ணிக்கை அதி­க­ரித்­து­விட்­டது என்­றும் அவர் கூறி­யுள்­ளார்.

அவ்­வ­ழக்கை 'நூடல்ஸ் வழக்கு' என்று குறிப்­பிட்ட அவர், விவா­க­ரத்து பெற்ற ஆட­வர், தன் மனை­வி­யால் எவ்­வாறு தின­மும் மளி­கைக் கடைக்­குச் சென்று நூடல்ஸ் மட்­டுமே கேட்டு வாங்­கி­வர முடிந்­தது என்ற கேள்­வி­யு­டன் கூடிய புகாரை எழுப்­பி­ய­தா­க­வும் தெரி­வித்­தார். திரு­ம­ண­மான தம்பதியர் குறைந்­த­பட்­சம் ஓராண்­டா­வது இணைந்து வாழ்ந்தால்தான் ஒருவரையொருவர் புரிந்துகொள்ள முடியும் என்றார் அவர்.