பாஜகவின் தோல்வி பயத்தால் டெல்லி அமைச்சர் கைது செய்யப்பட்டதாக ஆம் ஆத்மி புகார்

பாஜகவின் தோல்வி பயத்தால் டெல்லி அமைச்சர் கைது செய்யப்பட்டதாக ஆம் ஆத்மி புகார்

2 mins read
7ecbf9dd-c742-4402-a285-e115c3b6275d
-

புது­டெல்லி: சட்­ட­வி­ரோ­தப் பணப்­ப­ரி­மாற்­றத்­தில் ஈடு­பட்ட குற்­றச்­சாட்­டின் பேரில், டெல்லி சுகா­தார அமைச்­சர் சத்­யேந்­தர் ஜெயினை மத்­திய அம­லாக்­கத்­துறை கைது செய்­துள்­ளது.

இது மத்­திய அர­சின் பழி­வாங்­கும் நட­வ­டிக்கை என ஆம் ஆத்மி கட்சி குற்­றம்­சாட்டி உள்­ளது.

அக்­கட்­சி­யின் தலைமை ஒருங்­கி­ணைப்­பா­ள­ரும் டெல்லி முதல்­வ­ரு­மான கெஜ்­ரி­வால் தலை­மை­யி­லான டெல்லி அர­சுக்கு அவப்­பெ­யரை ஏற்­ப­டுத்­து­வ­தற்­காக மேற்­கொள்­ளப்­படும் முயற்சி இது என்­றும் அக்­கட்சி கூறி­யுள்­ளது.

கடந்த 2015ஆம் ஆண்டு அரசு ஊழி­ய­ராகப் பணி­யாற்றி வந்­தார் சத்­யேந்­தர் ஜெயின். அப்­போது தனக்­குச் சொந்­த­மான நிறு­வ­னங்­கள் மூலம் போலி நிறு­வ­னங்­கள் சில­வற்­றுக்கு அவர் சட்ட விரோ­த­மா­கப் பணப்­ப­ரி­மாற்­றம் செய்­த­தாக புகார் எழுந்­தது.

இதை­ய­டுத்து, அம­லாக்­கத்­துறை வழக்­குப் பதிவு செய்து விசா­ரணை மேற்­கொண்­ட­போது, 4.81 கோடி ரூபாய்க்கு சட்­ட­வி­ரோத பணப்­ப­ரி­மாற்­றம் நடந்­தி­ருப்­பது தெரி­ய­வந்­தது.

இதை­ய­டுத்து சத்­யேந்­தர் ஜெயின் மட்­டு­மல்­லா­மல், அவ­ரது குடும்­பத்­தார் மீதும் வழக்கு பாய்ந்­தது.

மேலும், சத்­யேந்­தர் ஜெயின் குடும்­பத்­தா­ருக்­குச் சொந்­த­மான நிறு­வ­னங்­களும் இந்த வழக்­கில் இணைக்­கப்­பட்­டன. கடந்த 2017ஆம் ஆண்டு தொடுக்­கப்­பட்ட இந்த வழக்கு விசா­ரணை நிலு­வை­யில் இருந்து வந்­தது.

சத்­யேந்­தர் ஜெயி­னு­டன் சம்­பந்­தப்­பட்ட நிறு­வ­னங்­க­ளுக்கு ஹவாலா மூலம் பணப்­பட்­டு­வாடா நடந்­தி­ருப்­பது தெரியவந்­துள்­ளது. இதில் கோல்­கத்­தா­வில் உள்ள சில­ருக்கு தொடர்பு இருப்­ப­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

சட்­ட­வி­ரோத பணப்­ப­ரி­மாற்­றத்­தின் மூலம் கிடைத்த தொகை நிலங்­களில் முத­லீடு செய்­யப்­பட்­ட­தா­க­வும் அம­லாக்­கத்­துறை தரப்­பில் தெரி­விக்­கப்­பட்­டது.

கடந்த 2018ஆம் ஆண்டு டிசம்­பர் மாதம் இந்த வழக்­கில் குற்­றப்­பத்­தி­ரிகை தாக்­கல் செய்­யப்­பட்­டது. எனி­னும், அச்­ச­ம­யம் சத்­யேந்­தர் ஜெயின் கைது செய்­யப்­ப­ட­வில்லை.

இந்­நி­லை­யில், நேற்று முன்­தி­னம் அவர் அதி­ர­டி­யாக கைது செய்­யப்­பட்­டார். அவர் விசா­ர­ணைக்கு ஒத்­து­ழைக்க மறுப்­ப­தாக அம­லாக்­கத்­துறை தரப்­பில் தெரி­விக்­கப்­பட்­டது.

இந்த கைது நட­வ­டிக்­கைக்கு ஆம் ஆத்மி கடும் கண்­ட­னம் தெரி­வித்­துள்­ளது.

மிக விரை­வில் இமாச்­ச­லப் பிர­தேச சட்­டப்­பே­ர­வைத் தேர்­தல் நடை­பெற உள்ள நிலை­யில், தோல்வி பயம் கார­ண­மாக, பாஜக இத்­த­கைய நட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­டு­வ­தாக டெல்லி துணை முதல்­வர் சிசோ­டியா சாடி­யுள்­ளார்.

எட்டு ஆண்­டு­க­ளுக்கு முன் பதி­வான போலி வழக்­கில் சத்­யேந்­தர் ஜெயின் கைது செய்­யப்­பட்­டுள்­ள­தாக குறிப்­பிட்ட அவர், இமாச்­ச­லப் பிர­தேச சட்­டப்­பே­ர­வைத் தேர்­த­லுக்கு ஆம் ஆத்மி கட்­சிப் பொறுப்­பா­ள­ராக சத்­யேந்­தர் ஜெயின் நிய­மிக்­கப்­பட்­டி­ருப்­பதே கைது நட­வ­டிக்­கைக்கு முக்­கிய கார­ணம் என்­றார். ஆம் ஆத்மி தொடர்ந்து போராடும் என்றும் அவர் கூறினார்.