புதுடெல்லி: சேவை, நல்ல நிர்வாகம், ஏழைகள் நலன் ஆகியவற்றுக்காக தொடர்ந்து பாடுபட மத்திய அரசு உறுதி பூண்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளர்.
நாட்டு மக்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதற்காக மட்டுமே மத்திய அரசு கடந்த எட்டு ஆண்டுகளைச் செலவிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் மோடி தலைமையிலான அரசு பொறுப்பேற்று எட்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், தமது பெயரிலான 'நமோ' செயலியில் எட்டு ஆண்டுகால வளர்ச்சிப் பயணம் குறித்த தொகுப்பு இடம்பெற்றுள்ளதாகவும் அதில் உள்ள தகவல்களைப் புதுமையான வழிகளில் காண முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

