டெல்லியில் கனமழை; 300 மரங்கள் சாய்ந்தன

டெல்லியில் கனமழை; 300 மரங்கள் சாய்ந்தன

1 mins read
20e1c33c-4bb6-4a1f-a395-1cdbe91eba3d
-

புது­டெல்லி: கன­மழை கார­ண­மாக டெல்­லி­யில் பொது­மக்­க­ளின் இயல்பு வாழ்க்கை பாதிக்­கப்­பட்­டுள்­ளது. அங்கு 300க்கும் மேற்­பட்ட மரங்­கள் வேரோடு சாய்ந்­ததை அடுத்து, பல்­வேறு பகு­தி­களில் போக்­கு­வ­ரத்து நிலை­குத்­தி­யது.

மழைக்கு இரு­வர் பலி­யா­கி­விட்­ட­தா­க­வும் நூறு கிலோ­மீட்­டர் வேகத்­தில் காற்று வீசி­ய­தால் பொது­மக்­கள் அச்­சத்­தில் உள்­ள­தா­க­வும் ஊட­கத் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

அண்­மைய சில தினங்­க­ளாக வட­மா­நி­லங்­களில் வெயில் உச்­சத்­தைத் தொட்­டது. இந்­நி­லை­யில், நேற்று முன்­தி­னம் மாலை டெல்லி உள்­ளிட்ட பல்­வேறு பகு­தி­களில் திடீர் மழை பெய்­யத் தொடங்­கி­யது. அப்­போது எதிர்­பா­ராத வகை­யில் புயல் காற்­றும் வீசி­யது.

மேக வெடிப்பு போல் குறைந்த நேரத்­தில் அதிக அள­வி­லான மழைப்­பொ­ழிவு பதி­வா­னது. பல­மாக வீசிய காற்­றுக்கு தாக்­குப்­பி­டிக்க முடி­யா­மல், டெல்­லி­யில் பல்­வேறு பகு­தி­களில் மரங்­கள் வேரோடு சாய்ந்­தன.

இத­னால் முக்­கிய சாலை­களில் போக்­கு­வ­ரத்து பாதிக்­கப்­பட்­டது. வாக­னங்­கள் பல கிலோ­மீட்­டர் தூரம் அணி­வ­குத்து நின்­றன.

கடந்த 2018ஆம் ஆண்­டுக்­குப் பிறகு டெல்­லி­யில் இது­போன்று புயல் காற்­று­டன் கூடிய பலத்த மழை பெய்­தி­ருப்­ப­தாக வானிலை ஆய்­வா­ளர்­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

இதற்­கி­டையே,மோச­மான வானி­லை­யால் டெல்லி வந்த எட்டு விமா­னங்­கள் திருப்பிவிடப்­பட்­டன. 70க்கும் மேற்­பட்ட விமா­னச் சேவை­யில் தாம­தம் ஏற்­பட்­டது.

பல பகு­தி­களில் மழை­நீர் வெள்ளம்­போல் தேங்கி நிற்­ப­தா­க­வும் டெல்லி மாந­க­ரம் தண்­ணீ­ரில் மிதக்­கும் நக­ரம்­போல் மாறி­விட்­ட­தா­க­வும் சமூக ஊட­கங்­களில் பலர் குறிப்­பிட்­டுள்­ள­னர்.

எனி­னும் கோடை காலத்­தில் பெய்த இந்தக் கனமழை இத­மாக இருந்­த­தா­க­வும் சிலர் கருத்து தெரி­வித்­துள்­ள­னர்.