இந்தியப் பொருளியல் வலுவாக மீள்கிறது

இந்தியப் பொருளியல் வலுவாக மீள்கிறது

2 mins read
d7df2ad0-40e4-49b2-994e-30c128e61dc5
-

அமெரிக்க நாடாளுமன்றத்தில் அந்நாட்டு நிதியமைச்சு தகவல்

புது­டெல்லி: மூன்று கொரோனா அலை­க­ளைச் சந்­தித்­த­போ­தும் இந்­திய பொருளியல் வலு­வாக மீண்டு வரு­கிறது என அமெ­ரிக்க நிதி­அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

ஓமிக்­ரான் பாதிப்­பா­னது இந்தி­ய பொரு­ளி­ய­லில் பெரும் தாக்­கத்தை ஏற்­ப­டுத்த­வில்லை என்­றும் அதி­க ­மா­னோர் உயி­ரி­ழக்­க­வில்லை என்றும் அந்த அமைச்சு கூறி­யுள்­ளது.

அமெ­ரிக்க நாடா­ளு­மன்­றத்­தில் அந்­நாட்டு நிதித்­துறை அறிக்கை ஒன்றை தாக்­கல் செய்­துள்­ளது. அதில், கொரோனா நெருக்­க­டிக்­குப் பின்­னர் அந்­நாட்­டின் பொரு­ளி­யல் சீர­மைப்பு நட­வ­டிக்­கை­கள் குறித்­தும் பிற நாடு­க­ளின் பொரு­ளி­யல் நிலைமை குறித்­தும் பல்­வேறு தக­வல்­கள் இடம்­பெற்­றுள்­ளன.

கடந்த 2020ஆம் ஆண்டு இந்­திய பொரு­ளி­யல் வளர்ச்­சி­யானது ஏழு விழுக்­கா­டாக இருந்த நிலை­யில், 2021ஆம் ஆண்­டின் மையப்­ப­கு­தி­யில் இந்­திய பொரு­ளி­யல் கொரோ­னா­வுக்கு முந்­தைய நிலையை நோக்­கிச் சென்­றது என்று அமெ­ரிக்க நிதி­ய­மைச்சு அறிக்­கை­யில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

பின்­னர் 2021ஆம் ஆண்­டில் இந்திய பொரு­ளி­யல் எட்டு விழுக்­கா­டாக உயர்ந்­தது என்­றும் அந்த அமைச்சு சுட்­டிக்­காட்டி உள்­ளது.

"2021ஆம் ஆண்­டின் இறு­திக்­குள் இந்­தி­யா­வின் மொத்த மக்­கள் தொகை­யில் 44 விழுக்­காட்­டி­ன­ருக்கு இரண்டு கொரோனா தடுப்­பூ­சி­கள் செலுத்­தப்­பட்­டது என்­றும் இந்­நட­வ­டிக்­கை­யா­னது பின்­ன­டை­வில் இருந்த நாட்­டின் பொரு­ளி­யலை மீண்­டும் பழைய நிலைக்கு கொண்டு ­வ­ரு­வ­தில் பெரும் பங்­காற்­றி­யது என்­றும் அமெ­ரிக்க நிதி­ய­மைச்சு நாடா­ளு­மன்­றத்­தில் தெரி­வித்­தது.

இதற்­கி­டையே, இந்­தி­யா­வில் கொரோனா தொற்­றால் பாதிக்­கப்­படு­வோ­ரின் அன்­றாட எண்­ணிக்கை தொடர்ந்து அதி­க­ரித்து வரு­கிறது. நேற்று முன்­தி­னம் புதி­தாக 8,329 பேருக்கு கிருமி தொற்­றி­யது.

இது கடந்த 103 நாள்­க­ளுக்­குப் பிறகு பதி­வான ஆக அதிக எண்­ணிக்­கை­யா­கும். நேற்று முன்­தி­னம் மேலும் பத்து பேர் தொற்­றுக்­குப் பலி­யா­கி­விட்­ட­னர்.

நாடு முழு­வ­தும் தொற்­றால் பாதிக்­கப்­பட்ட 40,370 பேருக்கு மருத்­து­வ­ம­னை­களில் சிகிச்சை அளிக்­கப்­பட்டு வரு­கிறது. நேற்று முன்­தி­னம் 1,508,406 பேருக்கு தடுப்­பூசி போடப்­பட்­ட­தாக மத்­திய சுகா­தார அமைச்சு தெரி­வித்­துள்­ளது. மகா­ராஷ்­டி­ரா­வி­லும் கேர­ளா­வி­லும் மீண்­டும் தொற்­றுப் பர­வல் அதி­க­ரித்து வரு­கிறது.