எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு மம்தா பானர்ஜி அழைப்பு

எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு மம்தா பானர்ஜி அழைப்பு

2 mins read
e264726a-3c81-4ea8-9c70-cfaaccf49787
-

புது­டெல்லி: ஜூலை 18ஆம் தேதி குடி­ய­ர­சுத் தலை­வர் தேர்­தல் நடை­பெ­றும் என்று தேர்­தல் ஆணை­யம் அறி­வித்­துள்­ளது. அதனை முன்­னிட்டு திரி­ணா­மூல் காங்­கி­ரஸ் தலை­வ­ரும் மேற்கு வங்க முதல்

வரு­மான மம்தா பானர்ஜி எதிர்க்­கட்­சித் தலை­வர்­க­ளு­டன் ரக­சிய ஆலோ­ச­னைக்­கூட்­டம் ஒன்றை நடத்த இருக்­கி­றார்.

அதற்­காக காங்­கி­ரஸ் தலை­வர் சோனியா காந்தி, மகா­ராஷ்­டிர முதல்­வர் உத்­தவ் தாக்­கரே, தமி­ழக முதல்­வர் மு.க.ஸ்டா­லின், தெலுங்­கானா முதல்­வர் சந்­தி­ர­சே­கர் ராவ் உட்­பட 22 எதிர்க்­கட்­சித் தலை­வர்­க­ளுக்கு கடி­தம் எழுதி உள்­ளார்.

அதில் "குடி­ய­ர­சுத் தலை­வர் தேர்­தல் நெருங்­கி­விட்­டது. அனைத்து பொறுப்­புள்ள எதிர்க்­கட்­சித் தலை­வர்­களும் கூடி, நம் நாட்டு அர­சி­ய­லின் எதிர்­கா­லம் குறித்து விவா­திப்­ப­தற்கு குடி­ய­ர­சுத் தலை­வர் தேர்­தல் சரி­யான ஒரு வாய்ப்பை வழங்கி உள்­ளது.

குடி­ய­ர­சுத் தலை­வர் தேர்­தல் மிக­வும் முக்­கி­யத்­து­வம் வாய்ந்­தது.

"ஏனெ­னில், நமது ஜன­நா­ய­கத்­தைப் பாது­காக்­கும் தலை­வ­ரைத் தேர்ந்­தெ­டுக்­கும் பொன்­னான வாய்ப்பை எம்.பி., எம்.எல்.ஏ.,க்க­ளுக்கு இந்த தேர்­தல் வழங்­கு­கிறது.

"நமது ஜன­நா­ய­கத்­துக்கு

அச்­சு­றுத்­தல் ஏற்­பட்டு வரும் நிலை­யில், விளிம்பு நிலை­யில் உள்ள மக்­க­ளின் நல­னுக்­காக எதிர்க்

கட்­சி­கள் ஒருங்­கி­ணைந்து செயல்­பட வேண்­டி­யது அவ­சி­ய­மா­கிறது.

"எனவே, வரும் 15ஆம் தேதி மாலை 3 மணிக்கு டெல்­லி­யில் உள்ள அர­சி­ய­ல­மைப்பு மன்­றத்­தில் ஆலோ­ச­னைக் கூட்­டம் நடை­பெற உள்­ளது.

"இதில் அனை­வ­ரும் கலந்­து­கொள்ள வேண்­டும். நீங்­கள் அனை­வ­ரும் இக்­கூட்­டத்­தில் பங்­கேற்­பீர்­கள் என நம்புகிறேன்," என்று அதில் குறிப்­பிட்­டி­ருந்­தார்.

நாட்­டில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.,க்க­ளின் ஒட்டு மொத்த வாக்கு மதிப்பு 10.86 லட்­சம் ஆகும்.

இதில் பாஜக தலை­மை­யி­லான கூட்­ட­ணி­யின் வாக்கு மதிப்பு 48 விழுக்­காட்­டுக்­கும் மேல் இருக்­கும் என மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

இது­த­விர, ஆந்­திர முதல்­வர் ஜெகன்­மோ­கன் தலை­மை­யி­லான ஒய்­எஸ்­ஆர் காங்­கி­ரஸ் மற்­றும் ஒடிசா முதல்­வர் நவீன் பட்­நா­யக் தலை­மை­யி­லான பிஜு ஜனதா தளம் கட்­சி­களும் பாஜக நிறுத்­தும் வேட்­பா­ள­ருக்கு ஆத­ரவு அளிக்­கும் என எதிர்­பார்க்­கப்படு­கிறது.

இத­னால் பாஜக சார்­பில் போட்­டி­யி­டும் வேட்­பா­ள­ருக்கு வெற்றி வாய்ப்பு பிர­கா­ச­மாக இருப்­ப­தா­கக் கரு­தப்­ப­டு­கிறது.

இந்­நி­லை­யில், தற்­போ­தைய துணை அதி­பர் வெங்­கையா

நாயு­டுவை, குடி­ய­ர­சுத் தலை­வர் தேர்­த­லில் பாஜக கள­மி­றக்­கி­னால், திமுக ஆத­ரிக்­கும் வாய்ப்பு

அதி­கம் உள்­ள­தாக கூறப்­ப­டு­கிறது.

குடியரசுத் தலைவர் தேர்தல் - புதுடெல்லியில் ஆலோசனை கூட்டம்

அதிபர் தேர்தலை அறிவித்த தேர்தல் அதிகாரிகள்.

படம்: இந்திய ஊடகம்