புவனேஷ்வர்: ஒடிசாவில் யானை
தாக்குதலால் மூதாட்டி ஒருவர் உயிரி ழந்த நிலையில், அவரது இறுதி சடங்கிலும் அதே யானை புகுந்து அட்டகாசம் செய்த சம்பவம் மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.
வியாழனன்று கிணற்றில் தண்ணீர் எடுக்கச் சென்றார் 70 வயது மூதாட்டி முர்மு. அப்போது தல்மா வனவிலங்கு சரணாலயத்தைச் சேர்ந்த யானை ஒன்று தாக்கி படுகாயம் அடைந்தார் முர்மு.
அவரின் அலறல் சத்தம் கேட்டு உதவிக்கு வந்தவர்கள் யானையிடம் இருந்து முர்முவைக் காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்தனர்.
ஆனால் படுகாயமடைந்திருந்த மூதாட்டி முர்மு மருத்துவமனை
யிலேயே உயிரிழந்தார்.
பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு மூதாட்டிக்கு இறுதிச்சடங்கு நடத்த குடும்பத்தினர் முர்முவின் உடலை தூக்கிச் சென்றனர்.
இறுதிச் சடங்கு நடந்த இடத்திற்கும் பெரும் சத்தத்துடன் மீண்டும் வந்தது அதே யானை.
அதைப் பார்த்த உறவினர்கள் அங்கிருந்து ஓடிச் சென்றனர்.
யானை அந்த மூதாட்டியின் உடலை தூக்கி வீசியது. தொடர்ந்து சடலத் தைத் தாக்கி, தூக்கிப்போட்டு மிதித்து, நசுக்கி, உடலைச் சின்னாபின்னமாக்கி விட்டு பலத்த சத்ததுடன் அங்கிருந்து அகன்றது.
அதைப்பார்த்த மக்கள் பீதியில் உறைந்து போனார்கள். மீண்டும் சிதைந்து போன மூதாட்டியின் உடல் பாகங்களைச் சேர்த்து இறுதிச்
சடங்கு செய்து முடித்தனர்.
ஒரே நாளில் மூதாட்டியை இரண்டு முறை தாக்கிய யானையின் கோபத்தை யும் அது பழிக்குப்பழி வாங்கி இருக்குமோ என்ற சந்தேகம் அங்கிருந்தவர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

