"மிரட்டலுக்கு பயப்படமாட்டேன்"

"மிரட்டலுக்கு பயப்படமாட்டேன்"

2 mins read
811439c8-9d46-4b3d-951e-3eea800a2a95
-

பாலக்­காடு: அண்­மை­யில் தங்­கக் கடத்­தல் தொடர்­பாக சிலர் தன்­னு­டன் பேசி­ய­தாக ஒரு ஆடி­யோ­வை­யும் ஸ்வப்னா வெளி­யிட்­டி­ருந்­தார். இதை­

ய­டுத்து முதல்­வர் பத­வி­யி­லி­ருந்து பின­ராயி விஜ­யன் விலக வேண்­டும் என எதிர்க்­கட்­சி­கள் தொடர்ந்து போராட்­டங்­களில் ஈடு­பட்டு வரு­கின்­றன.

இந்­நி­லை­யில் முதன்­மு­த­லாக இது­பற்றி பின­ராயி விஜ­யன் பேசு­கை­யில், "சிலர் என்னை மிரட்ட பார்க்­கி­றார்­கள். அதெல்­லாம் வீண் முயற்­சியே. கடந்த சட்­ட­சபை தேர்­த­லுக்கு முன்­பும் இது­போல் என் மீது வீண் புகார்­கள் எழுந்­தன. ஆனால் உண்மை என்ன என்­பது மக்­க­ளுக்குத் தெரி­யும். அத­னால்­தான் சிறப்­பான வெற்­றியை மக்­கள் வாரி கொடுத்து எங்­களை ஆட்­சி­யில் அமர வைத்­தார்­கள்.

"நம் நாட்­டின் நல­னுக்கு எதி­ராக செயல்­ப­டு­வோர் முன் மண்­டி­யி­ட­மாட்­டேன். குற்­றச்­சாட்­டு­கள் கூறு­வ­தாலோ போராட்­டத்­தில் ஈடு­ப­டு­வ­தாலோ எனக்கோ, அர­சுக்கோ எந்த வகை­யி­லும் பாதிப்பு இல்லை. எங்­கள் மீது மக்­கள் முழு நம்­பிக்கை வைத்­துள்­ள­னர். இந்த அரசு உண்­மையை கண்­ட­றிந்து குற்­ற­வா­ளி­களுக்குத் தண்­டனை பெற்­றுத் தரும்," என பின­ராயி விஜ­யன் தெரி­வித்­தார்.

இதற்­கி­டையே, தங்­கக் கடத்­தல் வழக்­கில் ஸ்வப்னா சுரேஷ் தரப்­பில் வக்­கீல் ஆர்.கிருஷ்­ண­ராஜ் வாதாடி வரு­கி­றார். அவர் ஒரு பேருந்து ஓட்டுநரை விமர்ச்சித்த வழக்கில் மாட்டி, முன் பிணையில் வெளிவராதபடி அவர் மீது வழக்குப் பதிவு செய்திருக் கின்றனர் கேரள போலிசார்.

அத­னால் மன­மு­டைந்த ஸ்வப்னா, "முதல் அமைச்­சர் மீதும் அவர் குடும்பத்தினர் மீதும் நான் அளித்­துள்ள புகார்­களில் இருந்து எந்­தக் கார­ணம் கொண்­டும் பின்­வாங்­கப் போவ­தில்லை. என்­னு­டன் இருப்­ப­வர்­

க­ளைக் குறி­வைத்து காவல்­துறை நட­வ­டிக்கை எடுக்­கிறது. என்­னைக் கொன்று விடுங்­கள். அப்­படி நடந்­தால் அனைத்து உண்­மை­களும் மூடப்­

பட்­டு­வி­டும்," என்று செய்­தி­யா­ளர்கள்

சந்­திப்­பில் கூறி­னார்.