இஸ்லாமிய அமைப்புகள்: போராட்டங்களைக் கைவிடுக

இஸ்லாமிய அமைப்புகள்: போராட்டங்களைக் கைவிடுக

2 mins read
fe9b6d00-73fb-42cf-b4f7-d493c47b2e0a
பாஜக முன்னாள் செய்தித் தொடர் பாளர் நூபுர் ஷர்மா நபிகள் நாயகம் குறித்து தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்துகளுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், அரசு சார்பற்ற இஸ்லாமிய அமைப்பான தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தியது. அதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.படம்: ஏஎஃப்பி -

'அமைதியைப் பேணுவதும் முக்கியம்; இஸ்லாத்தை அவமதித்தால் ஒன்றாக நிற்போம்'

புது­டெல்லி: நபி­கள் நாய­கம் குறித்து இழி­வான கருத்­து­கள் தெரி­விக்­கப்­பட்­ட­தைக் கண்­டித்து நடை­பெற்று வரும் போராட்­டங்­க­ளைக் கைவி­டு­மாறு இஸ்­லா­மி­யர்­க­ளுக்கு பல்­வேறு இஸ்­லா­மிய அமைப்­பு­களும் பள்­ளி­வா­சல்­க­ளின் தலை­வர்­களும் வேண்­டு­கோள் விடுத்­துள்­ள­னர்.

ஜார்க்­கண்ட், உத்­த­ரப் பிர­தேச மாநி­லங்­களில் அண்­மை­யில் நடை­பெற்ற ஆர்ப்­பாட்­டத்­தின்­போது இரண்டு பதின்ம வயது இஸ்­லாமி­யர்­கள் இறந்­த­னர். காவல்­து­றை­யி­னர் உட்­பட முப்­பது பேர் காய­ம­டைந்­த­னர்.

இத்­த­கைய சூழ­லில் மேற்­கு­றிப்­பிட்ட வேண்­டு­கோள் விடுக்­கப்­பட்­டுள்­ளது. போராட்­டங்­க­ளுக்­காக பெரிய அள­வில் ஒன்­று­கூட வேண்­டாம் என இஸ்­லா­மிய குழுக்­கள் அறி­வு­றுத்தி உள்­ளன.

"யாரே­னும் இஸ்­லாத்தை இழிவு­ப­டுத்­தும்­போது இஸ்­லா­மி­யர்­கள் அனை­வ­ரும் ஒன்­று­சேர்ந்து நிற்­பது நமது கட­மை­யா­கும். அதே­ச­ம­யம் அமை­தி­யைப் பேணு­வ­தும் முக்­கி­யம்," என்று ஜமாத்-இ-இஸ்­லாமி ஹிந்த் அமைப்­பின் மூத்த உறுப்­பி­ன­ரான திரு.மாலிக் அஸ்­லம் தெரி­வித்­துள்­ளார். இந்த அமைப்பு பல்­வேறு மாநி­லங்­களில் செயல்­படு­கிறது.

இந்த விவ­கா­ரம் தொடர்­பாக பிர­த­மர் மோடி இது­வரை எந்­தக் கருத்­தும் தெரி­விக்­க­வில்லை. வெளி­நா­டு­களில் இருந்து கண்­ட­னங்­கள் எழுந்­த­போ­தும் அவர் மௌனம் காக்­கி­றார்.

இந்­நி­லை­யில், இழி­வு­ப­டுத்­தும் கருத்­து­களை தெரி­வித்­த­வர்­களைக் கைது செய்ய வேண்­டும் என்று வலி­யு­றுத்தி நாடு தழு­விய அள­வில் இஸ்­லா­மி­யர்­கள் பல்­வேறு போராட்­டங்­களை நடத்தி வரு­கின்­ற­னர்.

இது­வரை பல்­வேறு மாநி­லங்­களில் ஆர்ப்­பாட்­டங்­களில் ஈடு­பட்­ட­தாக 400 பேர் கைதாகி உள்­ள­னர். சில இடங்­களில் ஊர­டங்கு உத்­த­ரவு அமல்­ப­டுத்­தப்­பட்­டன. இணை­யத் தொடர்­பும் துண்­டிக்­கப்­பட்­டுள்­ளது.

கடந்த ஞாயிற்­றுக்­கி­ழ­மை­யன்று ஆர்ப்­பாட்­டத்­தில் ஈடு­பட்ட ஒரு இஸ்­லா­மிய ஆட­வ­ரின் வீடு இடித்­துத் தள்­ளப்­பட்­டது. இது சமூ­க­ஆர்­வ­லர்­கள் இடையே கடும் அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்தி உள்­ளது.

பொது இடத்­தில் சட்­ட­வி­ரோ­த­மாக கட்­டப்­பட்­டுள்ள ஒரு வீடு­தான் இடிக்­கப்­பட்­டுள்­ளது என்­றும் போராட்­டங்­களில் ஈடு­படும் உரிமை உண்டு என்­றும் மாநில அர­சுத்­தரப்பு தெரி­வித்­துள்­ளது. மேலும் வீதி­யில் இறங்­கி­யும் போரா­ட­லாம் என்­கி­றார்­கள் அம்­மா­நில அதி­காரி­கள். இந்­நி­லை­யில், போராட்­டங்­களில் பங்­கேற்­ற­தற்­காக அரசு அளித்­துள்ள தண்­டனை இந்த வீடு இடிப்பு நட­வ­டிக்கை என்று பாதிக்­கப்­பட்­ட­வர் கூறி­யுள்­ளார்.