நடப்பாண்டில் பயங்கரவாதிகள் நூறு பேர் சுட்டுக்கொலை

நடப்பாண்டில் பயங்கரவாதிகள் நூறு பேர் சுட்டுக்கொலை

1 mins read
dde041f7-7f52-40cd-81fa-e7b6dafc3124
-

ஸ்ரீந­கர்: நடப்பு ஆண்­டில் மட்­டும் இந்­திய எல்­லைக்­குள் ஊடு­ருவ முயன்ற நூற்­றுக்­கும் மேற்­பட்ட பயங்­க­ர­வா­தி­கள் சுட்­டுக்­கொல்­லப்­பட்­டுள்­ள­தாக ராணு­வத் தரப்பு தெரி­வித்­துள்­ளது.

காஷ்­மீ­ரில் இந்த ஆண்டு முப்­பது பாகிஸ்­தான் பயங்­க­ர­வா­தி­கள் அங்­குள்ள பாது­காப்புப் படை­யி­னர் மேற்­கொண்ட நட­வ­டிக்­கை­கள் மூலம் கொல்­லப்­பட்­டுள்­ள­னர்.

கடந்த சில மாதங்­க­ளாக காஷ்­மீ­ரில் உள்ள இந்­துக்­களும் பண்டிட் இன மக்­களும் தொடர்ந்து தாக்­கு­தலுக்கு ஆளாகி வரு­வ­துடன் கார­ண­மின்றி கொல்­லப்­படும் கொடூ­ர­மும் நீடித்து வரு­கிறது.

நேற்று முன்­தி­னம் புல்­வாமா பகுதி­யில் பதுங்கி இருந்த பயங்­க­ர­வா­தி­களை பாது­காப்­புப் படை­யி­னர் சுற்றி வளைத்து தாக்­கு­தல் நடத்தி­னர். சுமார் பத்து மணி நேரம் நீடித்த துப்­பாக்­கிச்சூட்­டின் முடி­வில் மூன்று பயங்­க­ர­வா­தி­கள் சுட்­டுக்­கொல்­லப்­பட்­ட­னர்.

இந்­நி­லை­யில் நடப்­பாண்­டில் இது­வரை நூற்­றுக்­கும் மேற்­பட்ட பயங்­க­ர­வா­தி­கள் கொல்­லப்­பட்டுள்­ள­தாக பாது­காப்­புப் படை­யின் காஷ்­மீர் மண்­ட­லப் பிரிவு தெரி­வித்­தது. அவர்­களில் முப்­பது பேர் பாகிஸ்­தா­னில் இருந்து ஊடு­ரு­வி­ய­வர்­கள் ஆவர்.

காஷ்­மீர் பள்­ளத்­தாக்கு பகு­தி­யில் பல்­வேறு பயங்­க­ர­வாத அமைப்­பு­க­ளைச் சேர்ந்த மேலும் 158 பயங்­க­ர­வா­தி­கள் நட­மாடி வரு­வ­தாக ராணு­வத்­த­ரப்பு தெரி­வித்­தது. அவர்­களில் லஷ்­கர் இ தொய்பா பயங்­க­ர­வாத இயக்க உறுப்­பி­னர்­கள் 83 பேரும் ஜெய்ஷ் பயங்­க­ர­வா­தி­கள் 30 பேரும் அடங்­கு­வர். மேலும் ஹிஜ்­புல் முஜா­ஹி­தீன் இயக்­கத்­தைச் சேர்ந்த 38 பேரும் உள்ள­னர் என்று ராணு­வத் தரப்பு மேலும் கூறி­யுள்­ளது.