ராஜபக்சே குடும்பத்தில் மேலும் ஒருவர் பதவி விலகல்

ராஜபக்சே குடும்பத்தில் மேலும் ஒருவர் பதவி விலகல்

1 mins read
00112f1c-17aa-4b4d-a117-0bae61c4a22f
-

கொழும்பு: இலங்­கை­யின் முன்­னாள் சபா­நா­ய­க­ரும் மகிந்த ராஜ­பக்­சே­வின் சகோ­த­ர­ரு­மான சமல் ராஜ­பக்சே (படம்) தமது நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் பத­வி­யில் இருந்து விலகி உள்­ளார்.

மேலும், முழு­நேர அர­சி­ய­லில் இருந்து தாம் வில­கு­வது தொடர்­பான அதி­கா­ர­பூர்வ அறி­விப்பை அவர் அடுத்த நாடா­ளு­மன்ற அமர்­வின்­போது வெளி­யி­டு­வார் எனத் தெரி­கிறது.

ராஜ­பக்சே குடும்­பத்­தைச் சேர்ந்­த­வர்­கள் அடுத்­த­டுத்து பதவி, பொறுப்­பு­களில் இருந்து விலகி வரு­கின்­ற­னர். கடந்­த­வா­ரம் முன்­னாள் நிதி­ய­மைச்­சர் பசில் ராஜ­பக்சே தமது நாடா­ளு­மன்ற பத­வி­யைத் துறந்­தார்.

அத­னைத்­தொ­டர்ந்து இப்­போது சமல் ராஜ­பக்­சே­வும் எம்­பி ­ப­த­வியை துறப்­ப­தற்கு தயா­ராகி வரு­கி­றார்.

கடந்த மே 9ஆம் தேதி கொழும்பு காலி­மு­கத்­தி­ட­லில் இடம்­பெற்ற வன்­மு­றைச் சம்­ப­வங்­க­ளுக்­குப் பிறகு ராஜ­பக்சே குடும்­பத்­தார் அமைச்­சுப் பத­வி­களில் இருந்து வில­கி­னர்.

அத­னைத் தொடர்ந்து தற்­போது அவர்­கள் எம்பி பத­வி­யை­யும் துறந்து அர­சி­ய­லில் இருந்து ஒதுங்­கு­கின்­ற­னர்.