புதுடெல்லி: டெல்லியில் தண்ணீர் பற்றாக்குறை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அண்டை மாநிலமான ஹரியானா, டெல்லி மாநில மக்களின் தாகத்தைத் தீர்க்க உதவ வேண்டும் என டெல்லி குடிநீர் வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது.
யமுனை நதிக்கான நீர்வரத்து குறைந்துள்ளதை அடுத்து, டெல்லிக்கு தண்ணீர் விநியோகிக்கும் நீர்சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் அளவு குறைக்கப்பட்டுள்ளது.
எனவே, யமுனை நதியில் இருந்து டெல்லிக்குச் சேர வேண்டிய தண்ணீரை ஹரியானா உடனடியாகத் திறந்துவிட வேண்டும் என டெல்லி குடிநீர் வாரியத்தின் உதவி தலைவர் சௌரப் பரத்வாஜ் வலியுறுத்தி உள்ளார்.
இதற்கிடையே, மும்பையிலும் தண்ணீர் பற்றாக்குறை அதிகரித்து வருகிறது.