ராய்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 11 வயதுச் சிறுவனை மீட்கும் பணி மூன்று நாளுக்குப் பிறகும் நடைபெற்று வருகிறது.
சுயநினைவுடன் உள்ள சிறுவன் ராகுலுக்குக் குழாய் வழியாக உயிர்வாயு அனுப்பப்படுவதாகக் கூறப்பட்டது. மாநிலத்தினர் அனைவரும் ராகுலின் நலத்துக்காக வேண்டுவதாக முதல்வர் பூபேஷ் பாகல் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

