காசிப்பூர்: உத்தரகண்ட் மாநிலம் காசிப்பூர் பகுதியில் ஆட்டோ ஒன்று சாலையில் திரும்பிய போது அதில் பயணம் செய்த தாயின் மடியில் இருந்த குழந்தை தவறிக் கீழே விழுந்தது.
இதைக் கண்ட போக்குவரத்துக் காவலர் சுந்தர், விரைந்து சென்று எதிரே வந்த பேருந்தை நிறுத்தி அந்தக் குழந்தையை மீட்டார். இதுதொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் பரவிவருகிறது.

