கௌஹாத்தி: அசாம் தலைநகர் கௌஹாத்திக்கு அருகே நிசார்பூரில் கனமழையால் நேற்று நிலச்சரிவு ஏற்பட்டது.
தொழிலாளர்கள் நான்கு பேர் நிலச்சரிவால் ஏற்பட்ட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற அவசர உதவிக் குழுவினர் சடலங்களை மீட்டனர்.
உயிரிழந்த நால்வரும் கட்டுமானத் தொழிலாளிகள் என்றும் அங்கு வாடகை வீட்டில் வசித்துவந்தவர்கள் என்றும் தெரியவந்துள்ளது.
அடுத்த சில நாள்களுக்கு அசாம், மேகாலயா ஆகிய மாநிலங்களில் கனத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு நிலையம் எச்சரித்துள்ளதால் மக்கள் அவசியமின்றி வெளியில் செல்லவேண்டாமென அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

