மும்பை: தற்போது உள்ள மனைவி, மீண்டும் எந்த ஜென்மத்திலும் தங்கள் வாழ்க்கைத் துணையாக வந்துவிடக்கூடாது என அவுரங்கபாத் நகர ஆண்கள் சிலர் அரச மரத்தைச் சுற்றி வந்து நூதன வழிபாடு மேற்கொண்டனர்.
'வட் பூர்ணிமா' நாளில் பெண்கள் தங்கள் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கவும் ஏழு பிறவிகளிலும் தற்போது உள்ள கணவரே வாழ்க்கைத் துணையாக அமையவும் வேண்டிக்கொள்வர்.
ஆனால் அவுரங்காபாத்தில் மனைவியால் பாதிக்கப்பட்டோர் சங்கத்தைச் சேர்ந்த ஆண்கள் அதற்கு நேர்மாறாகச் செயல்பட்டுள்ளனர்.
"பெண்கள் நலனுக்காக உள்ள பல சட்டங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன. இதனால் ஆண்களுக்கு அநீதி இழைக்கப்படுகிறது. இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த நூதன வழிபாடு," என்கிறார் சங்கத்தின் தலைவர் பாரத் புலாரே.

