அசாம்: நிலச்சரிவு, பலத்த மழை, வெள்ளப்பெருக்கு

அசாம்: நிலச்சரிவு, பலத்த மழை, வெள்ளப்பெருக்கு

2 mins read
53fd4331-a7db-4f88-af15-c28a969fba09
அசாம் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் அந்தப் பகுதிகளில் முகாமிட்டு மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள் ளனர். படம்: தகவல் ஊடகம் -

10,000 பேர் மீட்பு, நிலச்சரிவில் சிக்கி நான்கு தொழிலாளர்கள் உயிரிழப்பு

கௌஹாத்­தி: அசாம் மாநி­லம் மீண்­டும் கன­ம­ழை­யால் புரட்­டிப்­போ­டப்­பட்­டுள்­ளது. பல இடங்­களில் நிலச்­ச­ரிவு ஏற்­பட்­டுள்ள நிலை­யில், பல முக்­கிய சாலை­களும் பாலங்­களும் கடு­மை­யாக சேத­ம­டைந்­துள்­ளன.

எட்டு மாவட்­டங்­களில் இயல்பு வாழ்க்கை நிலை­குத்­தி­யுள்­ள­தா­க­வும் வெள்­ளப்­பெ­ருக்­கால் பாதிக்­கப்­பட்­டுள்ள பத்­தா­யி­ரத்­துக்­கும் அதி­க­மா­னோர் பாது­காப்­பான இடங்­க­ளுக்கு அப்­பு­றப்­ப­டுத்­தப் பட்­டுள்­ள­னர் என்­றும் ஊட­கத் தகவல்­கள் தெரி­விக்­கின்­றன.

கடந்த மாதம் அசாம் உள்­ளிட்ட சில வடமாநி­லங்­களில் பலத்த மழை பெய்­த­தால் பெரும் சேதங்கள் ஏற்­பட்­டன. அந்­தப் பாதிப்­பில் இருந்து அசாம் மக்­கள் இன்­னும் மீள­வில்லை. அதற்­குள் மீண்­டும் பலத்த மழை, வெள்­ளப்­பெ­ருக்கு கார­ண­மாக பொது­மக்­கள் பல்­வேறு சிர­மங்­க­ளை­யும் சேதங்­க­ளை­யும் எதிர்­கொண்­டுள்­ள­னர்.

தலை­ந­கர் கௌஹாத்­தி­யின் பெரும்­பா­லான பகு­தி­களில் மழை நீர் இரண்­டடி உய­ரத்­துக்கு தேங்­கி­ உள்­ளது. இடை­வி­டாத மழை­யால் மாநி­லத்­தின் பல்­வேறு பகு­தி­களில் நிலச்­ச­ரி­வு­கள் ஏற்­பட்­டுள்­ளன.

நிலச்­ச­ரி­வில் சிக்கி நான்கு தொழி­லா­ளர்­கள் உயி­ரி­ழந்­து­விட்­ட­னர். கடந்த 13ஆம் தேதி முதல் 12 இடங்­களில் நிலச்­ச­ரிவு ஏற்­பட்­ட­தாக அசாம் மாநில பேரி­டர் மேலாண்மை படை தெரி­வித்­தது.

நிலச்­ச­ரி­வு­க­ளால் கீதா­ந­கர், சோனா­பூர், கலா­ப­ஹார், நிஜரபார் பகு­தி­களில் உள்ள முக்­கிய இணைப்­புப் பாதை­கள் அடைக்­கப்­பட்­டுள்­ளன.

கன­ம­ழை­யால் நக­ரின் பல பகுதி­களில் சாலை­களில் வெள்ளம் பெருக்­கெ­டுத்து ஓடு­கிறது. தாழ்­வான பகு­தி­களை வெள்­ளம் சூழ்ந்­துள்­ள­தால் வீடு­க­ளுக்­குள் மழை­நீர் புகுந்­துள்­ளது.

தற்­போது எட்டு மாவட்­டங்­கள் வெள்­ளக்­கா­டாக மாறி­யுள்­ளன. மழை இடை­வி­டா­மல் பெய்து வரு­வதால் மீட்­புப் பணி­களில் தாம­தம் ஏற்பட்­டுள்­ளது.

பாதிக்­கப்­பட்ட மக்­களை மீட்கும் பணி­யில் மாநில அர­சின் மீட்­புக்குழுக்­க­ளு­டன், தேசி­யப் பேரி­டர் மீட்­புப் பணி­யா­ளர்­களும் இணைந்­துள்­ள­னர். வெள்­ளத்­தால் சூழப்­பட்­டுள்ள பகு­தி­களில் இருந்து பட­கு­கள் மூலம் பலர் மீட்­கப்­பட்டு வரு­கின்­ற­னர். மேலும், வீடு­க­ளுக்­குள் முடங்கி இருப்­ப­வர்­க­ளுக்கு நிவா­ர­ணப் பொருள்­கள் வழங்­கப்­ப­டு­கின்­றன.

அசாம், மேகாலயா உள்ளிட்ட மாநி­லங்­க­ளுக்கு பலத்த மழைக்­கான சிவப்பு எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது. பள்ளி, கல்­லூ­ரி­கள் உட்­பட அனைத்து கல்வி நிறு­வ­னங்களுக்­கும் இன்று வரை விடு­முறை அளிக்­கப்­பட்­டுள்­ளது. வெள்­ளம் சூழ்ந்­துள்ள பகுதி­களில் இருந்து பொது­மக்­கள் மீட்­கப்­பட்டு நிவா­ரண முகாம்­களில் தங்க வைக்­கப்­பட்­டுள்­ள­னர். இது­வரை பத்­தா­யி­ரத்­துக்­கும் மேற்­பட்­ட­வர்­கள் மீட்­கப்­பட்­டுள்­ள­தாக அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர்.