அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சி சார்பில் பொது வேட்பாளர் களமிறக்கப்படுவதாக மம்தா தகவல்

அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சி சார்பில் பொது வேட்பாளர் களமிறக்கப்படுவதாக மம்தா தகவல்

1 mins read
74ef7430-8042-4a5d-9a64-af6914105509
-

லக்னோ: இந்­திய அதி­பர் தேர்­தலில் எதிர்க்­கட்­சி­கள் சார்­பில் பொது வேட்­பா­ளர் கள­மி­றக்­கப்­ப­டு­வார் என மேற்கு வங்க முதல்­வர் மம்தா பானர்ஜி தெரி­வித்­துள்­ளார்.

பாஜ­க­வுக்கு எதி­ராக மிகப்­பெரிய எதிர்க்­கட்­சி­கள் அணியை உரு­வாக்கும் முயற்­சி­யில் ஈடு­பட்­டுள்­ளார் மேற்­கு­ வங்க முதல்­வர் மம்தா.

இந்­நி­லை­யில், அவ­ரது ஏற்­பாட்­டில் அதி­பர் வேட்­பா­ளரைத் தேர்வு செய்­வ­தற்­கான எதிர்க்­கட்­சி­க­ளின் ஆலோ­ச­னைக் கூட்­டம் நேற்று முன்­தி­னம் டெல்­லி­யில் நடை­பெற்­றது. இதில் திரி­ணா­மூல் காங்­கி­ரஸ் உட்­பட 17 எதிர்க்­கட்­சி­கள் பங்­கேற்­றன.

இந்­தக் கூட்­டத்­துக்­குப் பின்­னர் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய மம்தா, அதி­பர் தேர்­த­லில் எதிர்க்­கட்­சி­கள் சார்­பில் பொது­வேட்­பா­ளரை நிறுத்­து­வது என ஒரு­மித்த முடிவு எடுக்­கப்­பட்­டுள்­ள­தா­கக் குறிப்­பிட்­டார்.

எதிர்க்­கட்­சி­க­ளின் பொது­வேட்பா­ள­ராகப் போட்­டி­யிட தேசி­ய­வாத காங்­கி­ரஸ் கட்­சித் தலை­வர் சரத்­ப­வா­ரி­டம் இரு­முறை கோரிக்கை வைக்­கப்­பட்­ட­தா­கக் குறிப்­பிட்ட அவர், அதை ஏற்க சரத்­ப­வார் மறுத்து­விட்­ட­தா­கத் தெரி­வித்­தார்.

எனவே பொது­வேட்­பா­ளர் யார் என்­பது குறித்து தொடர்ந்து ஆலோ­சனை நடத்­தப்­படும் என்­றும் விரை­வில் அது­கு­றித்து முடி­வா­கும் என்­றும் முதல்­வர் மம்தா கூறி­னார்.

பல மாதங்­க­ளுக்­குப் பிறகு எதிர்க்­கட்­சி­கள் ஒன்­று­கூடி ஆலோ­சனை நடத்தி இருப்­ப­தா­கக் குறிப்­பிட்ட அவர், இது ஒரு நல்ல தொடக்­கம் என வர்­ணித்­தார்.

இதே­போன்று எதிர்க்­கட்­சி­க­ளின் ஆலோ­சனை கூட்­டத்தை மீண்­டும் நடத்த இருப்­ப­தா­கத் தெரி­வித்­தார் மம்தா.

இதற்­கி­டையே, அதி­பர் தேர்­தலுக்­கான மனுத்­தாக்­கல் நேற்று முன்­தி­னம் தொடங்­கி­யது. முதல் நாளில் 11 பேர் மனுத் தாக்­கல் செய்­த­னர்.

பாஜக கூட்­டணி சார்­பில் கள­மிறக்­கப்­படும் வேட்­பா­ளர் யார் என்­பது விரை­வில் தெரி­ய­வ­ரும்.