தகவல் தொழில்நுட்பத்துறை ஊழியர் இன்று கழுதைப் பண்ணை உரிமையாளர்

தகவல் தொழில்நுட்பத்துறை ஊழியர் இன்று கழுதைப் பண்ணை உரிமையாளர்

1 mins read
5dfb3c00-96ff-4cbb-884f-cfb1f91a2d94
-

பெங்­க­ளூரு: கர்­நா­டக மாநி­லம் தட்­சிண கன்­னடா மாவட்­டத்­தைச் சேர்ந்த 38 வய­தான சீனி­வாச கவுடா தக­வல் தொழில்­நுட்ப நிறு­வ­னத்­தில் பத்து ஆண்­டு­க­ளா­கப் பணி­யாற்றி வந்­தார்.

கொரோனா நெருக்­கடி வேளை­யில், வீட்­டில் இருந்­த­படி வேலை பார்த்­த­போது, கால்­நடைப் பரா­மரிப்பு தொடர்­பான பயிற்­சி­யில் பங்­கேற்­றுள்­ளார்.

"அதில் ஆர்­வம் அதி­க­ரித்தது. தக­வல் தொழில்­நுட்­பத்­துறை வேலையை உத­றி­விட்டு ஆடு, கோழி வளர்ப்­புத் தொழி­லில் ஈடு­பட்­ட­போது குறு­கிய காலத்­தில் நல்ல வரு­மா­னம் கிடைக்­கவே, அடுத்து முயல் பண்ணை அமைத்து அதி­லும் வெற்றி கண்­டேன்.

"இப்­போது 20 கழு­தை­க­ளு­டன் கூடிய பண்­ணையை அமைத்­துள்­ளேன். அழகு சாத­னப் பொருள்­கள் தயா­ரிக்க கழு­தைப் பால் பயன்­படுத்­தும் நிறு­வ­னத்­து­டன் ரூ.17 லட்­சத்­துக்கு ஒப்­பந்­தம் செய்­துள்­ளேன். பண்ணையை முழுமையாக தயார் செய்த ஒரே வாரத்தில் இந்தப் ஒப்பந்த வாய்ப்பு அமைந்தது.

"முப்பது மில்லி கழுதைப் பாலை ரூ.150க்கு விற்கிறேன். முன்பு கேலி செய்தவர்கள் எல்லாம் இப்போது என்னைப் பாராட்டுகிறார்கள்," என்கி­றார் சீனி­வாச கவுடா.