கணக்குத் தணிக்கையாளர்கள் 400 பேர் மீது நடவடிக்கை

கணக்குத் தணிக்கையாளர்கள் 400 பேர் மீது நடவடிக்கை

2 mins read
81045f9b-0e97-49c1-bdfe-41eb7d356f8c
-

இந்தியாவில் உள்ள சீன போலி நிறுவனங்கள் வரி ஏய்ப்பு செய்ய உதவி

புது­டெல்லி: சீனாவைச் சேர்ந்த பல நிறு­வ­னங்­கள் வரி ஏய்ப்பு செய்ய, இந்­திய கணக்­குத் தணிக்­கை­யா­ளர்­கள் 400 பேர் உத­வி­யது தெரி­ய­வந்­துள்­ளது.

இதை­ய­டுத்து அவர்­கள் மீது நட­வ­டிக்கை எடுக்க மத்­திய அரசு முடிவு செய்­துள்­ள­தாக ஊட­கத் தக­வல் தெரி­விக்­கிறது.

நாட்­டின் எல்லை விவ­கா­ரம் தொடர்­பாக இந்­தி­யா­வுக்­கும் சீனா­வுக்­கும் இடை­யே­யான உற­வில் விரி­சல் ஏற்­பட்­டுள்­ளது. இரு நாடு­களும் பேச்­சு­வார்த்­தை­யில் ஈடு­பட்­டுள்­ளன.

இது­வரை பல­சுற்­றுப் பேச்சு­வார்த்தை­கள் நடத்­தப்­பட்ட பின்­ன­ரும், எல்­லை­யில் அவ்­வப்­போது சீன ராணு­வத்­தின் ஊடு­ரு­வல் முயற்­சி­கள் நடப்­ப­தும் இந்­திய ராணும் அதற்­குப் பதி­லடி கொடுப்­ப­தும் நடந்து வரு­கிறது.

சீனா­வு­ட­னான வர்த்­தக உறவும் பாதிக்­கப்­பட்­டுள்­ளது. இதன் காரண­மாக இந்­தி­யா­வில் செயல்­படும் சீன நாட்டு நிறு­வ­னங்­க­ளின் மீதான கண்­கா­ணிப்பு தீவி­ர­மாகி உள்­ளது.

சந்­தேக வலை­யில் உள்ள சீன நிறு­வ­னங்­க­ளின் நிதி பரி­வர்த்தனை­கள் அனைத்­தை­யும் மத்­திய விசா­ரணை முக­மை­கள் ஆய்வு செய்து வரு­கின்­றன.

இந்­நி­லை­யில், சீன நிறுவனங்கள் பல ­கோடி ரூபாய்க்கு வரி ஏய்ப்பு செய்­துள்­ள­தா­க­வும் இதற்­கா­கப் பல்­வேறு பகு­தி­களில் போலி நிறு­வ­னங்­களை நிறுவி, தங்­க­ளது கணக்­குத் தணிக்­கை­யா­ளர்­கள் மூலம் மோச­டி­யில் ஈடு­பட்­டி­ருப்­பதும் தெரியவந்­துள்­ளது.

சீன நிறு­வ­னங்­க­ளின் வரி ஏய்ப்புக்கு நானூற்­றுக்­கும் மேற்­பட்ட இந்­திய கணக்­குத் தணிக்­கை­யா­ளர்­கள் உடந்­தை­யாக இருந்­துள்­ள­னர்.

இவர்கள் வரி ஏய்ப்­புக்­கான வழி­மு­றை­களை சீன நிறு­வ­னங்­க­ளுக்­குக் கூறி உள்­ள­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

சீன நிறு­வ­னங்­க­ளின் வரி ஏய்ப்பு குறித்து மத்­திய நிறு­வன விவ­கா­ரங்­க­ளுக்­கான அமைச்­சுக்கு நிறைய புகார்­கள் வந்­தன. இதை­யடுத்து விசா­ரணை தொடங்­கி­யது. அதில், பெரு நக­ரங்­களில் போலி­யான சீன நிறு­வ­னங்­களை நிறுவ கணக்­குத் தணிக்­கை­யா­ளர்­கள் உதவி இருப்­பது தெரி­ய­வந்­தது.

மொத்­தம் 400 கணக்­குத் தணிக்­கை­யா­ளர்­களும் நிறு­வ­னச் செய­லர்­களும் இந்த மோச­டிக்­குத் துணை­போ­யுள்­ள­னர்.

எனவே, இவர்­கள் மீது உரிய நட­வ­டிக்கை எடுக்­கப்­பட உள்­ள­தாக மத்­திய நிறு­வன விவ­கார அமைச்சு தெரி­வித்­துள்­ளது. இது தொடர்பாக விசாரணை நீடித்து வருகிறது.