முரளீதரன்: கேரள முதல்வர் மீது சந்தேகம் எழுகிறது

முரளீதரன்: கேரள முதல்வர் மீது சந்தேகம் எழுகிறது

2 mins read
6da2ee4e-ef5d-4d6a-af06-ef723b944491
-

திரு­வ­னந்­த­புரம்: கேர­ளா­வில் பல்­வேறு விவா­தங்­களை எழுப்­பி­யுள்ள தங்­கக் கடத்­தல் வழக்­கில் நேர்­மை­யான, நியா­ய­மான விசா­ர­ணைக்கு அம்­மா­நில அரசே தடை­யாக இருந்­த­தாக மத்­திய வெளி­யு­றவு இணைய அமைச்­சர் முர­ளீ­த­ரன் தெரி­வித்­துள்­ளார்.

திரு­வ­னந்­த­பு­ரத்­தில் செய்­தி­யாளர்­க­ளி­டம் பேசிய அவர், மாநில அர­சின் அர­சி­யல் தலை­யீடு கார­ண­மாக கேரள காவல்­து­றை­யி­ன­ரால் தங்­கள் கட­மை­க­ளைச் சரி­யா­கச் செய்ய முடி­ய­வில்லை என்­றார்.

தங்­கக் கடத்­தல் விவ­கா­ரத்­தால் கேரள அர­சி­யல் களத்­தில் பர­ப­ரப்பு நில­வு­கிறது. அம்­மா­நில முதல்­வர் பின­ராயி விஜ­ய­னுக்­கும் தங்­கக் கடத்­தல் விவ­கா­ரத்­தில் தொடர்­புள்­ள­தாக இந்த வழக்­கில் குற்­றம்­சாட்­டப்­பட்­டுள்ள ஸ்வப்னா தெரி­வித்­துள்­ளார்.

மேலும் முதல்­வ­ரின் குடும்­பத்­தாருக்கும் கடத்­த­லில் தொடர்­புண்டு என்று ஸ்வப்னா நீதி­மன்­றத்­தில் வாக்­கு­மூ­லம் அளித்­தி­ருப்­ப­தால் பின­ராயி விஜ­யன் பதவி விலக வேண்­டும் என எதிர்்க்­கட்­சி­கள் வலி­யு­றுத்தி வரு­கின்­றன. தினமும் ஏதா­வது போராட்­டங்­களும் நடத்தப்­ப­டு­கின்­றன.

இந்­நி­லை­யில், கடத்­தல் வழக்­கில் முதல்­வர் பினராயி விஜ­ய­னுக்­கும் தொடர்பு இருக்­க­லாம் என்ற வலு­வான சந்­தே­க­மும் கவ­லை­யும் பாஜ­க­வுக்கு உள்­ள­தாக மத்­திய அமைச்­சர் முர­ளீ­த­ரன் கூறி­யுள்­ளார்.

"முதல்­வ­ரின்கீழ் உள்ள பொது நிர்­வா­கத்­துறை செயல்­பாடு, ஐக்­கிய அரபு சிற்­ற­ர­சின் தூத­ரக ஊழி­யர்­களு­ட­னான தொடர்பு போன்­றவை மற்ற மாநி­லங்­களில் கேள்­விப்­ப­டாத ஒன்­றா­கும்.

"மேலும் இது தொடர்­பாக அம­லாக்­கத்­துறை விசா­ர­ணை­யில் இடை­யூறு ஏற்­ப­டுத்­தும் வகை­யில் மாநில அரசு நடந்து கொண்­டது, மத்­திய விசா­ரணை அமைப்­புக்கு எதி­ராக மாநில அரசு சார்­பில் விசா­ரணை ஆணை­யம் அமைக்­கப்­பட்­ட­து போன்ற நட­வ­டிக்­கை­கள் சந்­தே­கத்­துக்கு கார­ண­மாக அமைந்­துள்­ளன," என்­றார் அமைச்சர் முரளீ­த­ரன்.

கேரள காவல்­து­றை­யி­னர் திறமை­யற்­ற­வர்­கள் என்று தாம் ஒரு­போ­தும் கூற­வில்லை என்று குறிப்­பிட்ட அவர், ஸ்வப்னா சுரேஷ் முன்­வைத்­துள்ள குற்­றச்­சாட்­டு­களுக்கு கேரள முதல்­வர் பதி­லளிக்க வேண்டும் என்­றார்.