அசாம்: ஐந்து நதிகளில் வெள்ளப்பெருக்கு

அசாம்: ஐந்து நதிகளில் வெள்ளப்பெருக்கு

1 mins read
c614183b-f6eb-44b0-b12b-be01923ba85f
அசாமின் சில்சார் பகுதியில் இருந்து மீட்கப்பட்ட பொதுமக்கள். படம்: தகவல் ஊடகம் -

கவு­காத்தி: அசாம் மாநி­லத்­தில் வெள்­ளப்­பெ­ருக்கு மேலும் மோச­மடைந்து வரும் நிலை­யில், அங்கு பலி எண்­ணிக்கை 81ஆக அதி­க­ரித்­துள்­ளது.

அசா­மில் ஓடும் ஐந்து முக்­கிய நதி­க­ளி­லும் வெள்­ளப்­பெ­ருக்கு ஏற்­பட்­டுள்­ளது.

பிரம்­ம­புத்ரா, கோபிலி, பெக்கி உள்­ளிட்ட நதி­களில் நீர்­மட்­டம் அபாய அள­வைக் கடந்­துள்­ளது.

எனவே, கரை­யோரப் பகு­தி­களில் வசிக்­கும் மக்­கள் பாது­காப்­பான இடங்­க­ளுக்­குச் செல்ல வேண்­டும் என தொடர்ந்து எச்­ச­ரிக்­கப்­பட்டு வரு­கிறது.

நடப்­பாண்­டில் பருவ மழை தொடர்­பான சம்­ப­வங்­களில் பலி­யா­னோர் எண்­ணிக்கை 81ஆக அதி­க­ரித்­துள்­ளது. அவர்­களில் 17 பேர் நிலச்­ச­ரி­வால் உயி­ரி­ழந்­து­விட்­ட­னர்.

மாநி­லம் முழு­வ­தும் சுமார் 4.7 மில்­லி­யன் பேர் மழை, வெள்­ளப்­பெ­ருக்­கால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர் என்­றும் அவர்­களில் ஒரு மில்­லி­யனுக்­கும் அதி­க­மா­னோர் சிறார்­கள் என்­றும் அசாம் பேரி­டர் மேலாண்மை ஆணை­யம் தெரி­வித்­துள்­ளது.

மொத்­த­முள்ள 34 மாவட்­டங்­களில் தற்­போது 32 மாவட்­டங்­கள் மழை­யால் பாதிக்­கப்­பட்­டுள்­ளன. ஐந்­தா­யி­ரத்­துக்­கும் மேற்­பட்ட கிரா­மங்­களை வெள்ளநீர் சூழ்ந்­துள்­ளது. பெரும்­பா­லான கிரா­மங்­களும் பல்­வேறு நக­ரங்­களும் மின்­வெட்டு கார­ண­மாக இரு­ளில் மூழ்­கி­உள்ளன.

மாநி­லம் முழு­வ­தும் 810 நிவாரண முகாம்­கள் அமைக்­கப்­பட்­டுள்­ளன. மேலும் 615 நிவா­ர­ணப் பொருள்­கள் விநி­யோ­கிக்­கும் மையங்­களும் செயல்­பட்டு வரு­கின்­றன. 2,31,819 பேர் நிவா­ரண முகாம்­களில் தங்கி உள்ள நிலை­யில், 113,485 ஹெக்­டேர் விளைநிலங்­கள் வெள்ள நீரில் மூழ்­கி­யுள்­ளன.

இதற்­கி­டையே, வெள்­ளச் சேதங்­க­ளைப் பார்­வை­யிட மத்திய குழு அனுப்பி வைக்­கப்­படும் என மத்­திய உள்­துறை அமைச்­சர் அமித்ஷா தம்­மி­டம் தெரி­வித்­த­தாக அசாம் முதல்­வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா கூறியுள்ளார்.