சிவசேனா அமைச்சர் மாயம்

சிவசேனா அமைச்சர் மாயம்

1 mins read
2c6496bd-8f31-467d-89dc-fad3345cdfd9
-

மும்பை: சிவ­சேனா அமைச்­சர் ஏக்­நாத் ஷிண்டே தலை­மை­யில் 12 எம்­எல்­ஏக்­கள் திடீ­ரென மாய­மா­னது பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்தி உள்­ளது.

இத­னால் அங்கு ஆளும் சிவ­சேனா தலை­மை­யி­லான கூட்­டணி ஆட்­சிக்கு கடும் நெருக்­கடி ஏற்­பட்­டுள்­ளது.

அண்­மை­யில் நடை­பெற்ற மாநி­லங்­க­ள­வைத் தேர்­தல்­க­ளி­லும் மகா­ராஷ்­டிர சட்ட மேல­வைத் தேர்­த­லி­லும் பாஜக தனக்­குள்ள எம்­எல்­ஏக்­க­ளின் பலத்­தை­யும் மீறி அதிக இடங்­களை வென்­றது.

இதற்கு ஆளும் சிவ­சேனா கட்சி எம்­எல்­ஏக்­கள் சிலர் பாஜ­க­வுக்கு ஆத­ரவு அளித்­ததே கார­ணம் என்று கூறப்­பட்­டது.

இந்­நி­லை­யில், அமைச்­சர் ஏக்­நாத் ஷிண்டே தலை­மை­யில், 12 எம்­எல்­ஏக்­கள் மாய­மாகி உள்­ள­னர். அவர்­கள் குஜ­ராத் மாநி­லம் சூரத் நக­ரில் உள்ள சொகுசு விடு­தி­யில் தங்கி இருப்­ப­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

இத­னால் சிவ­சேனா தலை­மை­யி­லான கூட்­டணி ஆட்­சிக்கு ஆபத்து ஏற்­பட்­டுள்­ள­தாக அர­சி­யல் பார்­வை­யா­ளர்­கள் கருது­கின்­ற­னர்.