பீகார் அரசு கண்ணை மூடிக்கொண்டுள்ளது என பாஜக மாநிலத் தலைவர் குற்றச்சாட்டு

பீகார் அரசு கண்ணை மூடிக்கொண்டுள்ளது என பாஜக மாநிலத் தலைவர் குற்றச்சாட்டு

2 mins read
d7a0f75c-599d-4f61-9d52-f7226528dfbf
-

பாட்னா: அக்­னி­பாதை திட்­டத்­துக்கு எதி­ரான போராட்­டத்தை அடக்­கா­மல் பீகார் மாநில அரசு கண்­களை மூடிக்கொண்­டு­விட்­ட­தாக அம்­மா­நில பாஜக தலை­வ­ரான சஞ்­சய் ஜெய்ஸ்­வால் குற்­றம்­சாட்டி உள்­ளார்.

போராட்­டங்­கள் தொடர்­பாக பீகார் முதல்­வர் நிதிஷ்­கு­மார் இது­வரை எந்­த­ கருத்­தும் கூறா­தது ஏன் என்று அவர் கேள்வி எழுப்­பி உள்­ளார்.

"முதல்­வர் தனது அதி­கா­ரி­களுக்கு நட­வ­டிக்கை எடுக்­க­வும் உத்­த­ர­வி­ட­வில்லை. போராட்­டக்­கா­ரர் களி­டம் அமைதி­யா­கப் போராடுங்­கள் என்று கூறவும்­கூட முன்­வ­ர ­வில்லை," என்று சஞ்­சய் ஜெய்ஸ்­வால் கூறி­யுள்­ளார்.

மதே­புரா பகு­தி­யில் உள்ள பாஜ­க­வின் அலு­வ­ல­கம் போராட்­டக்­கா­ரர்­க­ளால் சூறை­யா­டப்­படும் காணொ­ளிப்­ப­திவை அவர் நேற்று முன்­தி­னம் வெளி­யிட்­டார். அதில் போராட்­டக்­கா­ரர்­களைத் தடுக்­காமல் காவல்­து­றை­யி­னர் வேடிக்கை பார்ப்பது பதி­வாகி உள்­ளது.

இந்­நி­லை­யில் பாஜக தலை­வர் சஞ்­சய் ஜெய்ஸ்­வால் புத்தி பேத­லித்­தது போல் பொறுப்­பில்­லா­மல் பேசி­யுள்­ள­தாக பீகார் முதல்­வ­ருக்கு நெருக்­க­மான ஆளுங்­கட்­சிப் பிர­மு­கர் ராஜீவ் ரஞ்­சன் விமர்­சித்­துள்­ளார்.

மத்­திய அர­சின் அக்­னி­பாதை திட்­டத்­திற்கு எதி­ராக பீகா­ரில் மட்­டு­மன்றி இதர மாநி­லங்­க­ளி­லும் எதிர்ப்பு கிளம்பி உள்­ள­தா­கக் குறிப்­பிட்­டுள்ள அவர், அக்­னி­பாதை திட்­டத்­தால் தங்­க­ளது எதிர்­காலம் பாதிக்­கப்­படும் என்ற அச்­சம் போரா­டு­ப­வர்­க­ளின் மன­தில் எழுந்­துள்­ள­தா­கத் தெரி­வித்­துள்­ளார்.

"வன்­மு­றையை எந்த அர­சும் ஆத­ரிக்­க­வில்லை. இளை­ஞர்­க­ளின் அச்­சத்தைப் போக்க முயற்­சிக்­காமல் எங்­கள் அரசு மீது புகார் கூறுகி­றார்­கள்.

"இவர்­க­ளால் பாஜக ஆளும் மத்­தி­யப் ­பி­ர­தே­சம், உத்­த­ரப்­ பி­ர­தே­சம், ஹரி­யானா உள்­ளிட்ட மாநி­லங்­களில் நிக­ழும் வன்­மு­றையை ஏன் தடுக்க முடி­ய­வில்லை," எனக் ராஜீவ் ரஞ்­சன் கேள்வி எழுப்­பி­யுள்­ளார்.

அக்­னி­பாதை திட்­டத்­துக்கு எதி­ராக பீகா­ரில்­தான் பெரிய அள­வி­லான தொடர் போராட்­டங்­கள் நடை­பெற்று வரு­கின்­றன.

அங்கு ஆளும் நிதிஷ்­கு­மார் தலை­மை­யி­லான அர­சுக்கு பாஜக ஆத­ர­வ­ளித்து வரு­கிறது.

இந்­நி­லை­யில் அக்­னி­பாதை போராட்­டங்­க­ளின்­போது ஆறு இடங்­களில் பாஜக அலு­வ­ல­கங்­கள் போராட்டக்காரர்களால் சூறையாடப்பட்டன.