கட்சி பேதமின்றி தலைவர்களைத் தொற்றிய கொரோனா

கட்சி பேதமின்றி தலைவர்களைத் தொற்றிய கொரோனா

1 mins read
a704305f-6916-4c95-84ae-63432a6badb8
-

புது­டெல்லி: இந்­தி­யா­வில் இது­வரை இல்­லாத அள­வுக்கு கட்சி பேத­மின்றி அர­சி­யல் தலை­வ­ர்களைத் தொற்­றி­யுள்­ளது கொரோனா.

அர­சி­யல் குழப்­பம் மிகுந்து வரும் மகா­ராஷ்­டிர மாநி­லத்­தின் முதல்­வர் உத்­தவ் தாக்­கரே, அந்த மாநில ஆளு­நர் பகத் சிங் கோஷ்­யாரி, 80, ஆகி­யோர் கொள்­ளை­நோ­யால் பாதிக்­கப்­பட்டு உள்­ள­னர். இத­னால் முதல்­வர் உத்­தவ், நேர­டி­யா­கத் தலை­யிட்டு அர­சி­யல் நெருக்­க­டிக்­குத் தீர்வு காண்­ப­தில் அவ­ருக்கு சிர­மம் ஏற்­பட்டு உள்­ளது.

இந்­நி­லை­யில், காங்­கி­ரஸ் கட்­சி­யின் மூத்த தலை­வ­ரும் மாநி­லங்­க­ளவை முன்­னாள் எதிர்க்­கட்சி தலை­வ­ரு­மான குலாம் நபி ஆசாத், 73, கொரோ­னா­வால் பாதிக்­கப்­பட்­டுள்­ளார். இதனை அவரே தமது டுவிட்­ட­ரில் தெரி­வித்­தார்.

அதே­நே­ரம் குஜ­ராத் மாநில பாஜக அர­சின் சுகா­தார அமைச்­சர் ருஷி­கேஷ் படே­லை­யும் கொரோனா கொள்­ளை­நோய் தொற்­றி­யுள்­ளது.

இதற்கிடையே, நேற்றுக் காலை வரையிலான 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 12,249 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தொற்று காரணமாக 13 பேர் உயிரிழந்தனர். இதனால் மாண்டோர் எண்ணிக்கை 524,903 ஆனது. தற்போது 81,687 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை எடுத்து வருகின்றனர். அண்மைக் காலமாக ஒவ்வொரு நாளும் சராசரியாக 10,000 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.