தங்கக் கடத்தல் வழக்கு: மோடியைச் சந்திக்க நேரம் கேட்கிறார் ஸ்வப்னா

தங்கக் கடத்தல் வழக்கு: மோடியைச் சந்திக்க நேரம் கேட்கிறார் ஸ்வப்னா

1 mins read
02b50a32-bf09-40c2-a308-87e2a8d28342
-

திரு­வ­னந்­த­பு­ரம்: தங்­கக் கடத்­தல் வழக்­கில் கைதாகி பிணை­யில் விடப்­பட்­டி­ருக்­கும் ஸ்வப்னா சுரேஷ் (படம்), தங்­கக் கடத்­த­லில் முதல்­வர் பின­ராயி விஜ­ய­னுக்கும் அவ­ரது குடும்­பத்­தி­ன­ருக்­கும் நேர­டித் தொடர்பு இருப்­ப­தா­கக் கூறி பர­

ப­ரப்பை ஏற்­ப­டுத்தி வரு­கி­றார்.

இதை­ய­டுத்து, பின­ராயி விஜ­யன் முதல்­வர் பத­வி­யில் இருந்து வில­கக் கோரி கேரள எதிர்க்­கட்­சி­கள் போராட்­டம் நடத்­தின.

இந்­நி­லை­யில், ஸ்வப்னா சுரேஷ், பிர­த­மர் நரேந்­திர மோடிக்கு நேற்று முன்­தி­னம் கடி­தம் எழு­தி­னார்.

அந்­தக் கடி­தத்­தில், "தங்­கக் கடத்­தல் வழக்கு தொடர்­பான உண்­மை­களை வெளிச்­சத்­துக்­குக் கொண்­டு­வர இந்த வழக்கை சிபிஐ விசா­ரிக்க வேண்­டும். உங்­களை நேரில் சந்­திக்க நேரம் ஒதுக்க வேண்­டு­கி­றேன்.

"கேரள முதல்­வ­ரின் முன்­னாள் முதன்­மைச் செய­லா­ளர் சிவ­சங்­க­ரும் தங்­கக் கடத்­த­லில் ஈடு­பட்­டார். மூத்த அதி­கா­ரி­க­ளின் உத்­த­ர­வு­

க­ளுக்கு அடி­ப­ணிந்து நான் செயல்­பட்­டேன்.

"இதைத் தவிர நான் வேறு எந்­தத் தவ­றும் செய்­ய­வில்லை. கேரள முதல்­வ­ருக்­கும் அவ­ரது குடும்­பத்­தி­ன­ருக்­கும் வழக்­கில் நேரடித் தொடர்பு உள்­ளது.

"அவர்­கள் இது­வரை விசா­ரிக்­கப்­ப­ட­வில்லை," என்று ஸ்வப்னா குறிப்­பிட்­டுள்­ளார்.

கடந்த 2020 ஜூலையில் கேரள தலைநகர் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் 30 கிலோ தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இந்த வழக்கில் ஐக்கிய அரபு சிற்றரசுகளின் முன்னாள் ஊழியர் ஸ்வப்னா சுரேஷ், கேரள முதல்வர் பினராயி விஜயனின் முதன்மை செயலாளர் சிவசங்கர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.