செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
d355ce59-d3aa-4ced-9eb9-a542344d6bec
-

அசாம் கனமழை: இதுவரை 101 பேர் பலி

கௌகாத்தி: அசாம் மாநிலத்தில் நேற்று முன்தினம் மேலும் 12 பேர் உயிரிழந்ததை அடுத்து, மழை, வெள்ளப்பெருக்கு காரணமாக பலியானோர் எண்ணிக்கை 101ஆக அதிகரித்து உள்ளது. 32 மாவட்டங்களைச் சேர்ந்த 5.5 மில்லியன் பேர் மழையால் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரம்மபுத்திரா, பாராக் நதிகளில் நீர்மட்டம் அபாய அளவைத் தாண்டியுள்ளதால் கரையோரப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரித்துள்ளது.

அதிகாலை நிலநடுக்கத்தால் மக்கள் பீதி

பெங்­க­ளூரு: அதி­காலையில் ஏற்­பட்ட நில­ந­டுக்­கம் கார­ண­மாக கர்­நா­ட­கா­வின் ஹாசன் மாவட்ட மக்­கள் பீதி­ய­டைந்­த­னர். நேற்று காலை சுமார் ஐந்து மணி­ய­ள­வில் அம்­மா­வட்­டத்­தின் பெரும்­பா­லான பகு­தி­களி்லும் அரு­கி­லுள்ள குடகு மாவட்­டத்தின் சில பகுதிகளிலும் நில­ந­டுக்­கம் உணரப்பட்டது. ரிக்­டர் அள­வு­கோ­ளில் 3.4 புள்­ளியாக பதி­வான இந்நில­ந­டுக்­கம் ஒரு நிமி­டம் நீடித்­தது. உயி­ருடற்சேதம் ஏதுமில்லை என்­ற­போ­தி­லும் இரு மாவட்­டங்­க­ளி­லும் பல வீடு­கள் சேத­ம­டைந்­துள்­ளன.

ரூ.34,615 கோடி வங்கி மோசடி குறித்து சிபிஐ விசாரணை; வழக்குப்பதிவு

புதுடெல்லி: மொத்தம் 17 வங்கிகளை உள்ளடக்கிய கூட்டமைப்பிடம் ரூ.34,615 கோடி அளவுக்கு மோசடி செய்துள்ளதாக திவான் வீட்டுவசதி நிதிக் கழகத்தின் நிர்வாக இயக்குநர் கபில் வதாவன்மீது சிபிஐ வங்கி மோசடி வழக்குப்பதிவு செய்துள்ளது. மேலும், ஆறு சொத்துச் சந்தை நிறுவனங்கள்மீதும் மோசடி வழக்கு பாய்ந்துள்ளது. சிபிஐ விசாரிக்கும் ஆகப்பெரிய வங்கி மோசடி வழக்கு இதுவாகும். இதுதொடர்பாக கடந்த பிப்ரவரி மாதம் வங்கி கூட்டமைப்பு புகார் எழுப்பியது. இதையடுத்து சிபிஐ இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டது. அதில், புகாருக்கு முகாந்திரம் இருப்பது தெரியவந்ததை அடுத்து, வழக்கு பதிவாகியுள்ளது.