புதுடெல்லி: இந்தியாவில் உள்ள மாநிலங்களின் எண்ணிக்கை 50 ஆக உயர்த்தப்படும் என மத்திய பொது விநியோகம், உணவுத்துறை அமைச்சர் உமேஷ்கட்டி தெரிவித்துள்ளார்.
2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடந்து முடிந்த பிறகு புதிய மாநிலங்கள் உருவாக இருப்பதாக அவர் பெலகாவியில் செய்தியாளர்களிடம் பேசும்போது குறிப்பிட்டார்.
கர்நாடகா இரண்டு மாநிலங்களாகப் பிரிக்கப்படும் என்றும் வளர்ச்சியை பரவலாக்க இத்தகைய நடவடிக்கை அவசியம் என்றும் அவர் கூறினார்.
"மகாராஷ்டிரா மூன்று மாநிலங்களாகவும், உத்தரப் பிரதேசம் நான்கு மாநிலங்களாகவும் பிரிக்கப்படும். இதுகுறித்து பிரதமர் மோடி ஆலோசித்து வருகிறார்," என்றார் உமேஷ்கட்டி. அவரது இந்த கருத்துக்கு கர்நாடக எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

