துக்கத்தில் முடிந்த கொண்டாட்டம்

துக்கத்தில் முடிந்த கொண்டாட்டம்

1 mins read
cad30b92-463e-4da8-87b0-cf779ef60473
-

லக்னோ: திரு­ம­ணக் கொண்­டாட்­டத்­தின்­போது மண­ம­கன் துப்­பாக்­கி­யால் சுட்­ட­தில், எதிர்­பா­ராத வித­மாக அவ­ரது நண்­ப­ரின் தலை­யில் குண்டு பாய்ந்­தது.

உத்­த­ரப் பிர­தேச மாநி­லத்­தைச் சேர்ந்த 25 வய­தான மணீஷ் என்பவரின் திரு­ம­ணம் நேற்று முன்­தினம் நடை­பெற்­றது.

அன்று மாலை மண­ம­கனை ஊர்­வ­ல­மாக அழைத்து வந்­த­னர். அதன் பின்­னர் அவ­ரது நண்­ப­ரான 26 வயது பாபு­லால் என்பவர் தன்­னி­டம் இருந்த கைத்­துப்­பாக்­கியை மணீ­ஷி­டம் கொடுத்து வானத்தை நோக்கிச் சுட்டு மகிழ்ச்­சியை வெளிப்­படுத்­து­மாறு கூறி­ உள்­ளார்.

மணீ­ஷும் துப்­பாக்­கியை வாங்கி வானத்தை நோக்­கிச் சுட, எதிர்பாராத வித­மாக அதி­லி­ருந்து வெளி­யான குண்டு, பாபு­லால் தலை­யில் பாய்ந்­த­தில் அவர் ரத்த வெள்­ளத்­தில் உயி­ரி­ழந்­தார்.

பாபு­லால் ராணு­வத்­தில் பணி­யாற்­றி­ய­வர் என்று கூறப்­ப­டு­கிறது. இந்­நி­லை­யில் அவ­ரது பெற்­றோர் அளித்த புகா­ரின் பேரில் மண­மகன் மணீஷை காவல்துறை கைது செய்துள்ளது.

இதனால் கொண்டாட்ட நிகழ்வு துக்கத்தில் முடிந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பான காணொளிப் பதிவு ஒன்று சமூக ஊடகங்களில் தற்போது பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.